கோவா: பிரிக்ஸ் குழுவின் புதிய டெவலப்மெண்ட் வங்கியின் தலைவர் காமத் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது வங்கிகளின் வாராக்கடனால் பிரச்சனை இல்லை என்றும் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2.5 லட்சம் கோடி கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் காமத் பேசிய போது ஏற்கனவே வட்டி விகிதம் குறைத்து இருப்பதன் மூலம் 2.5 லட்சம் 1.5 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும் மேலும் 1 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைக்கும் சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளது என்றும் அப்போது மொத்தம் 2.5 லட்சம் கோடி வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலாண்டுகளாக வாராக்கடன் அதிகரித்ததனால் வங்கிகள் நட்டம் அடைந்து இருந்தன. இப்போது வட்டி விகிதம் குறைந்துள்ளதால் வங்கிகளின் கருவூலத்தின் ஆதாயம் உயர்ந்துள்ளதால் மூலதனத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.
வங்கிகளின் சொத்து மதிப்பைச் சென்ற ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ததில் இருந்து கடன்களில் உள்ள பிரச்சனை கண்டறிந்து அதை மீட்கும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன என்றும் கே.வி.காமத் தெரிவித்தார்.
ஆர்பிஐயின் ஜூன் காலாண்டு அறிக்கையின் படி வங்கிகளின் மொத்த அசையா சொத்துக்கள் 8.7 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.