கால் சென்டர் மோசடியில் 61 நிறுவனங்கள் மீது அமெரிக்கா வழக்கு..!

கால் சென்டர் மோசடியில் இந்தியாவில் 61 நிறுவனங்கள் மற்றும் இதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது அமெரிக்கா வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் நடந்த கால் சென்டர் மோசடிக்கு, அமெரிக்க அரசு அதிகாரிகள் இந்தியாவில் 61 நிறுவனங்கள் மற்றும் இதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த மோசடிக்கு தொடர்புடைய 20 பேரை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தானே பகுதியில் மிரா சாலையில் உள்ள கால் சென்டரில் இருந்துக்கொண்டு அமெரிக்காவில் பல குடிமக்களை வருவாய் சேவை அதிகாரி என தோற்றத்தில் தொடர்பு கொண்டு வரி செலுத்தாதமைக்காக மிரட்டியுள்ளனர்.

கால் சென்டர் மோசடியில் 61 நிறுவனங்கள் மீது அமெரிக்கா வழக்கு..!

இவர்கள் வலையில் சிக்குவோர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 500 டாலர் முதல் 60,000 டாலர் வரையிலான தொகையை பெற்றுள்ளனர் இந்த மோசடி மன்னர்கள். குறிப்பிட்ட தொகையை கொடுக்க மறுக்கும் நபர்களிடம், நீங்கள் பணத்தை செலுத்தவில்லை என்றால் 30 நிமிடத்தில் உங்களை கைது செய்யவும், உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளனர்.

இந்க கால் சென்டரில் பணிப்புரியும் ஒரு ஊழியர் அளித்த தகவல் மூலம் மும்பை காவல் துறையினர் தானே பகுதியில் இருக்கும் கால் சென்டர்களில் சோதனை செய்தனர்.

இந்த மோசடியின் பெயரில் மும்பை காவல் துறையினர் சுமார் 630 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸாரின் விசாரணையில் பெயரில் இந்த மோசடி அனைத்திற்கும் தலைவனாக செயல்பட்டது 33 வயதான ஜகதீஷ் காநானி என தெரிய வந்துள்ளது.

முழுமையான செய்திக்கு: அமெரிக்க மக்களை ஏமாற்றி 500 கோடி ரூபாய் 'ஊழல்'.. கால் சென்டரில் தில்லாலங்கடி..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+