மும்பை: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் குறித்து நிலவி வரும் மாறுபட்ட பொருளாதார நிலைகள் அமெரிக்காவை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.
இதனால் நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 350 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துச் சந்தையைப் பதம்பார்த்தது.
ஆனால் வியாழக்கிழமை சீனா உற்பத்தி அளவுகள் 2 வருட உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆசிய சந்தையில் சீன பங்குச்சந்தை மட்டும் லாபத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய பங்குச்சந்தையில், அமெரிக்க நிலைப்பாட்டின் பாதிப்புகளைச் சீன சந்தை குறைந்ததால் இன்று மதியம் 1.50மணிக்கு மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 29.43 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
நிஃப்டி குறியீடு 5.25 புள்ளிகள் சரிந்து 8,508.75 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் கணிசமான சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.