அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வர்த்தக சரிவிற்கு பயந்து அன்னிய முதலீட்டாளர்கள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரை பங்குகளை விற்பனை செய்தனர்.
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவக்கம் முதலே தொடர் சரிவை சந்தித்தது சென்செக்ஸ் குறியீடு. இதனை தொடர்ந்து சந்தையில் முதலீட்டு அளவும் தொடர்ந்து குறைந்தது.
ஐரோப்பிய சந்தை துவங்கிய பின் 100 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை கண்டது மும்பை பங்குச்சந்தை. மேலும் ஜிஎஸ்டி அமைப்பின் 4 முறை வரி மசோதா ஒப்புதல் பெற்ற நிலையில் சந்தையில் அதிகளவிலான சரிவு தடுக்கப்பட்டது.
இந்நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 156.13 புள்ளிகள் சரிந்து 27,274.15 புள்ளிகளை அடைந்து.
சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் சரிவை சந்தித்த நிஃப்டி குறியீடு 51.20 புள்ளிகள் சரிந்து 8,433.75 புள்ளிகள் எட்டி வெள்ளிக்கிமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.