மும்பை: 5 நாட்கள் தொடர் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏறுமுகத்தைக் கண்டது. நாளை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் துவங்க உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அளித்த பதில் அமெரிக்கச் சந்தைக்கு மிகவும் சாதகமான அமைந்தது.
கடந்த 5 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 667 புள்ளிகள் வரை சரிந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அளித்த சாதகமான பதிலால் சர்வதேச சந்தை வர்த்தகம் இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.84 புள்ளிகள் உயர்ந்து 27.458.99 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று தொடர் வர்த்தக உயர்வில் 63.30 புள்ளிகள் உயர்ந்து 8,497.05 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களும் சரி, உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி அதிகளவில் வங்கி மற்றும் பார்மா துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.