514 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிப்பிற்காகப் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வுக்கான அதிர்வுகள் ஆகியவை ஆசிய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.

இதனால் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் காலை வர்த்தகம் துவக்கம் முதல் மும்பை பங்குச்சந்தை சரிவுடனே காணப்படுகிறது. மேலும் இன்றைய வர்த்தகப் பாதிப்பிற்கு டாலர் மதிப்பின் 14 வருட உயர்வு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

514 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்.. என்ன காரணம்..?

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 514.19 புள்ளிகள் குறைந்து 26,304 புள்ளிகளை அடைந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 187.85 புள்ளிகள் சரிந்து 8,108.45 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி, தசரா பண்டிகை காரணமாக இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தி அளவுகள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. அதிலும் உற்பத்தித் துறையில் பாதிப்பு சற்று அதிகமாகக் காணப்படுகிறது. இதுவும் இன்றைய வர்த்தகச் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex slumps over 500 points

Sensex slumps over 500 points - Tamil Goodreturns
Story first published: Tuesday, November 15, 2016, 16:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X