மும்பை: இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிப்பிற்காகப் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கி வட்டி உயர்வுக்கான அதிர்வுகள் ஆகியவை ஆசிய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.
இதனால் இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் காலை வர்த்தகம் துவக்கம் முதல் மும்பை பங்குச்சந்தை சரிவுடனே காணப்படுகிறது. மேலும் இன்றைய வர்த்தகப் பாதிப்பிற்கு டாலர் மதிப்பின் 14 வருட உயர்வு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 514.19 புள்ளிகள் குறைந்து 26,304 புள்ளிகளை அடைந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 187.85 புள்ளிகள் சரிந்து 8,108.45 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மேலும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி, தசரா பண்டிகை காரணமாக இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தி அளவுகள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. அதிலும் உற்பத்தித் துறையில் பாதிப்பு சற்று அதிகமாகக் காணப்படுகிறது. இதுவும் இன்றைய வர்த்தகச் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications