இன்று வரை ஜிஎஸ்டி சட்டம் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் இதற்கான வரையறுக்கப்பட்ட கடைசிக் கட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடந்த டிசம்பர் மாத குளிர்கால மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதை 2017 ஏப்ரல் 1 தேதிக்குள்
செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால் இப்போது இது மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகின்றது.
எனவே நாம் இங்கு இதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
கடைசி மைல் பிரச்சினைகள்...
ஜிஎஸ்டி-ல் இப்போது உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சனை தான் அதை முடக்கி உள்ளது. மாநில அரசுகள் அனைத்தும் 1.5 கோடிக்குக் கீழ் உள்ள அனைத்து வரி தாக்கலுக்கான வரிகளையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கான ஜிஎஸ்டி கூட்டம் வரும் டிசம்பர் 22-23 ஆம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து இன்று வரை ஜிஎஸ்டி சட்டம் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் இதற்கான வரையறுக்கப்பட்ட கடைசிக் கட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இதனை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் முடிவுக்குக் கொண்டு வர இயலாது என்று கூறப்படுகின்றது.
அப்படியானால் ஜிஎஸ்டி தாமதம் ஆகலாம்
மத்திய அரசு 2017 ஏப்ரல் மாதம் முதல் துவங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் குறைந்து கால அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே பிப்ரவரி மாத பட்ஜெட் கூட்டத்தில் தான் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்படும் என்று அதன் பிறகு ஒரு மாதத்தில் விதிமுறைகளைத் தயாரிப்பது கடினம் என்று கூறப்படுகின்றது.
தாமதமானால் எப்போது அமலுக்கு வரும்
ஒருவேலைத் தாமதம் ஆனால் 2017 செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது.
மேலும் அவகாசம்
ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான பொருளாதாரத்தில் இன்னும் சிக்கல்கள் உள்ளன. இதனால் ரூபாய் நோட்டுகள் பிரச்சனையும் தீரும் அரசுக்கு வரி மீதான சிக்கல்களைத் தீர்க்க கூடுதல் அவகாசமும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications