திங்கட்கிழமை வர்த்தகம் மந்தமாக முடிவுற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை, ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாகவும், மும்பை பங்குச்சந்தையில் ப்ளூ சிப் பங்குகள் மீதான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு தொடர் உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் பிற அனைத்துத் துறைகளைக் காட்டிலும் எண்ணெய் மற்றும் ஏரிவாயு, PSU, ஆட்டோமொபைல் மற்றும் வங்கித் துறையைச் சார்ந்த நிறுவனப் பங்குகளில் அதிகளவிலான முதலீடு குவித்தது.
மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்கல் மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம் பதிவேயேற்பு ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கினாலும், இந்திய சந்தையில் தொடர்ந்து கணிசமான முதலீடுகள் குவிந்துகொண்டு தான் இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 173.01 புள்ளிகள் உயர்ந்து 26,899.56 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 52.55 புள்ளிகள் உயர்ந்து 8,288.60 புள்ளிகளையும் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.