விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும் என்றும் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும், கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்த பயிர் காப்பீடு திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.13000 கோடியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி, கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு, ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும் என்று ஜேட்லி பட்ஜெட் 2017-ல் தெரிவித்துள்ளார்.
வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்.