மும்பை: பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நான்காவது நாளாக மும்பை பங்குச்சந்தை இன்றும் உயர்ந்துள்ளது. பட்ஜெட் எதிரொலியின் மூலம் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் கணிசம் 0.25 சதவீதம் புள்ளிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 220 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 198.76 புள்ளிகள் உயர்ந்து 28,439.28 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர் உயர்வில் இருந்த நிஃப்டி குறியீடு 60.10 புள்ளிகள் உயர்ந்து 8,801.05 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்குப் பின் வரும் முதல் நாணய கொள்கையால் கண்டிப்பாக வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.