வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தில் 16,200 கோடி ரூபாய் வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அருண் ஜெட்லி தகவல் தெரிவித்தார்.
வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தில் 16,200 கோடி ரூபாய் வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அருண் ஜெட்லி தகவல் தெரிவித்தார்.
முறையான விசாரணையின் விளைவாக எச்எஸ்பிசி வங்கி கணக்கு மூலமாக இரண்டு ஆண்டுகளில் 8,200 கோடி ரூபாய் வரை கணக்கில் காண்பிக்காத பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
துப்பறியும் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு
மேலும் 8,000 கோடி ரூபாய் வரை கணக்கில் காண்பிக்கப்படாமல் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கி கணக்கில் பதுக்கிவைத்துள்ளதாகவும், அவர்களுடைய பெயர் மற்றும் விவரங்கள் துப்பறியும் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) அளித்த அறிக்கையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் போது அருண் ஜெட்லி கூறினார்.
எவ்வளவு கருப்புப் பணம்
வெளிநாட்டில் இந்தியர்கள் எவ்வளவு கருப்புப் பணம் வைத்துள்ளார்கள் என்ற தகவல் ஏதும் இல்லை, ஆனால் அரசு வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான பணிகளில் முழுவீச்சாகச் செயல்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண சட்டம்
கருப்புப் பணத்தின் சட்டத்தின் கீழ் கணக்கில் காண்பிக்கப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றுச் சொத்துக்கள் விவரங்களைக் குறிப்பாகத் திறம்பட ஆராய்ந்து வருவதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.
கருப்புப் பணத்தை வைத்துள்ளவர்களுக்குக் கருப்பு பணத்தின் சட்டத்தின் கீழ் கடுமையான அபராதம் மற்றும் வழக்குகள் பதிவு செய்ய விதிகள் உள்ளன என்றும் அருண் ஜேட்லி கூறினார்.
பணம் மோசடி தடுப்புச் சட்டம் 2002
மேலும் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் முதல் முறையாகக் கணக்கில் காண்பிக்கப்படாத வருமானம் மற்றும் சொத்துக்கள் பணம் மோசடி தடுப்புச் சட்டம் 2002-இன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாகக் கருதப்படும் என்பதையும் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் கருப்புப் பணம் எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கை அனைத்தையும் பட்டியலிட்டு விளக்கம் அளித்தார் அருண் ஜெட்லி.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications