5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து திருமணம் செய்கிறீர்கள் என்றால் ஏழைப் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்பது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.
டெல்லி: மக்களவையில் விரைவில் உங்கள் திருமணத்திற்கு எவ்வளவு விருந்தினர்கள் வர வேண்டும், என்ன உணவு வகைகள் செய்ய வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்கு எல்லாம் கடிவாளம் போட இருக்கின்றது.
5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து திருமணம் செய்கிறீர்கள் என்றால் ஏழைப் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்பது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.
5 லட்சம் உச்ச வரம்பு
உங்கள் திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்றால் 10 சதவீதம் வரை ஏழைப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற மசோதாவை காங்கிரஸ் எம்பி ரஞ்சித் மனைவியும் எம்பியுமான பப்பு யாதவ் அறிமுகம் செய்துள்ளார்.
காரணம்
திருமண (கட்டாய பதிவு மற்றும் வீண்செலவு தடுப்பு) மசோதா 2016 தனியார் உறுப்பினர் மசோதாவாக மக்களவையில் ஏற்றுக்கொண்டு விவாதிக்க இருக்கின்றது.
இந்த மசோதா எடுத்துவருவதற்கான முக்கிய காரணமாக திருமணத்தில் செய்யும் தேவையில்லாத செலவுகளை குறைக்க வைத்து எளிமையாகச் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே என்று எம்பி ரஞ்சித் கூறுகின்றார்.
பெரிய நடவடிக்கை
திருமணம் என்றால் இரண்டு தனிநபர்களுக்கானது, ஆனால் இன்றோ பெரும் அளவில் செலவு செய்வதினால் ஏழை பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது, சமுகத்தையும் பாதிக்கின்றது.
இதை நாம் கண்டிப்பாக சமுகத்திற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பப்பு யாதவ் கூறுகின்றார்.
இந்த மசோதாவில் அப்படி என்ன தான் புதுமை..?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிதாக திருமணம் செய்பவர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்யும் போது 10 சதவீதம் வரை ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்காக அரசிற்குச் செலுத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் திருமணம் முடிந்த 60 நாட்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.
விருந்தினர்களுக்கும் கட்டுப்பாடு
திருமணத்திற்கு எவ்வளவு விருந்தினர்கள் வர வேண்டும், என்ன உணவு வழங்கப்பட வேண்டும் போன்ற வற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கின்றது. இது எதற்கு என்ற கேள்விக்கு உணவுப் பொருட்கள் வீணாக்குவது குறையும் என்று கூறுகின்றனர்.
ஆடம்பர எம்பி
பப்பு யாதவ் சொல்வது சரி என்று வைத்துக்கொள்வோம், இந்த எம்பி பாராளுமன்றத்திற்கு வரும் பைக்கின் விலையே 15 லட்சம் தாண்டும். அப்படிப்பட்ட ஆடம்பர எம்பி இப்படி ஒரு சட்டத்தை எடுத்து வருவதை வரவேற்பதுடன், இவரும் இது போன்ற செலவுகளைக் குறைத்து ஏழை மக்களுக்கு உதவினால் நன்மை பயக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications