இளைஞர்களின் திருமண கனவை தவிடு பொடியாக்கும் ஹார்லி டேவிட்சன் 'எம்பி'..!

5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து திருமணம் செய்கிறீர்கள் என்றால் ஏழைப் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்பது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மக்களவையில் விரைவில் உங்கள் திருமணத்திற்கு எவ்வளவு விருந்தினர்கள் வர வேண்டும், என்ன உணவு வகைகள் செய்ய வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்கு எல்லாம் கடிவாளம் போட இருக்கின்றது.

5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து திருமணம் செய்கிறீர்கள் என்றால் ஏழைப் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என்பது போன்ற சட்டம் நிறைவேற்றப்பட இருக்கின்றது.

5 லட்சம் உச்ச வரம்பு

5 லட்சம் உச்ச வரம்பு

உங்கள் திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்றால் 10 சதவீதம் வரை ஏழைப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற மசோதாவை காங்கிரஸ் எம்பி ரஞ்சித் மனைவியும் எம்பியுமான பப்பு யாதவ் அறிமுகம் செய்துள்ளார்.

காரணம்

காரணம்

திருமண (கட்டாய பதிவு மற்றும் வீண்செலவு தடுப்பு) மசோதா 2016 தனியார் உறுப்பினர் மசோதாவாக மக்களவையில் ஏற்றுக்கொண்டு விவாதிக்க இருக்கின்றது.

இந்த மசோதா எடுத்துவருவதற்கான முக்கிய காரணமாக திருமணத்தில் செய்யும் தேவையில்லாத செலவுகளை குறைக்க வைத்து எளிமையாகச் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே என்று எம்பி ரஞ்சித் கூறுகின்றார்.

 

பெரிய நடவடிக்கை

பெரிய நடவடிக்கை

திருமணம் என்றால் இரண்டு தனிநபர்களுக்கானது, ஆனால் இன்றோ பெரும் அளவில் செலவு செய்வதினால் ஏழை பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது, சமுகத்தையும் பாதிக்கின்றது.

இதை நாம் கண்டிப்பாக சமுகத்திற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பப்பு யாதவ் கூறுகின்றார்.

 

இந்த மசோதாவில் அப்படி என்ன தான் புதுமை..?

இந்த மசோதாவில் அப்படி என்ன தான் புதுமை..?

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிதாக திருமணம் செய்பவர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்யும் போது 10 சதவீதம் வரை ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்காக அரசிற்குச் செலுத்த வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் திருமணம் முடிந்த 60 நாட்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

 

விருந்தினர்களுக்கும் கட்டுப்பாடு

விருந்தினர்களுக்கும் கட்டுப்பாடு

திருமணத்திற்கு எவ்வளவு விருந்தினர்கள் வர வேண்டும், என்ன உணவு வழங்கப்பட வேண்டும் போன்ற வற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கின்றது. இது எதற்கு என்ற கேள்விக்கு உணவுப் பொருட்கள் வீணாக்குவது குறையும் என்று கூறுகின்றனர்.

ஆடம்பர எம்பி

ஆடம்பர எம்பி

பப்பு யாதவ் சொல்வது சரி என்று வைத்துக்கொள்வோம், இந்த எம்பி பாராளுமன்றத்திற்கு வரும் பைக்கின் விலையே 15 லட்சம் தாண்டும். அப்படிப்பட்ட ஆடம்பர எம்பி இப்படி ஒரு சட்டத்தை எடுத்து வருவதை வரவேற்பதுடன், இவரும் இது போன்ற செலவுகளைக் குறைத்து ஏழை மக்களுக்கு உதவினால் நன்மை பயக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This Harley riding MP is crashing India's wedding plans

This Harley riding MP is crashing India's wedding plans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X