நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த சவரன் தங்கப் பத்திர திட்டம் 7வது முறையாகப் பிப்ரவரி 27 முதல் மார்ச் 3-ம் தேதி வரை வெளிவர இருக்கின்றது.
தங்கம் மீதான ஆர்வத்தைக் குறைத்து, தங்கத்தைப் போன்றே லாபம் அளித்து, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த சவரன் தங்கப் பத்திர திட்டம் 7வது முறையாகப் பிப்ரவரி 27 முதல் மார்ச் 3-ம் தேதி வரை வெளிவர இருக்கின்றது.
தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு 2.5 சதவீதம் வரை முதலீட்டாளர்கள் வட்டி பெற முடியும்.
எத்தனை நாட்களுக்குத் தங்கப் பத்திரம் வழங்கப்படும்
இதற்கான விண்ணப்பம் 2017, பிப்ரவரி 27 முதல் மார்ச் 3-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் பங்கு சந்தையில் கிடைக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பின்னர் இதற்கான பத்திரங்கள் மார்ச் 17 தேதி விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
வட்டி எப்போது வழங்கப்படும்
சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அரை ஆண்டுதோறும் தங்களது முதலீட்டிற்கான வட்டியைப் பெற முடியும். கடைசி ஒரு வருட முதலீட்டில் மட்டும் அரை ஆண்டுதோறும் வழங்காமல் திட்டத்தின் முதிர்வு காலத்தின் போது வழங்கப்படும்.
சவரன் தங்கப் பத்திரங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது
இதுவரை தங்கப் பத்திரம் வெளியிட்ட போது 3,809 கோடிகள் வரை முதலீடுகளை அரசு பெற்றது. இந்தச் சவரன் தங்கப் பத்திர திட்டம் பிரதமர் மோடி அவர்களால் 2015 ஆம் ஆணு அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று திட்டங்கள்
சவரன் தங்கப் பத்திரம், தங்க நாணயம் திட்டம், தங்கம் பணமாக்கும் திட்டம் என மூன்று பெயரில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தோல்வி அடைந்த ஒரு திட்டம்
இதில் வீட்டில் உள்ள தங்கத்தை முதலீடு செய்யும் திட்டமான தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் மட்டும் தோல்வியைச் சந்தித்தது.
2017-2018ம் நிதி ஆண்டின் இலக்கு
2017-2018ம் நிதி ஆண்டில் மட்டும் 5,000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015-2016ம் நிதி ஆண்டில் 1,318 கோடி ரூபாய் தங்க பத்திரம் மூலமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் எங்கெல்லாம் முதலீடு செய்ய முடியும்..?
தங்கப் பத்திரங்களை வங்கிகள், தபால் நிலையங்கள், பங்குச் சந்தை அலுவலகங்கள், தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை ஆகிய இடங்களில் பெறலாம்.
முதலீடு காலம்
தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தற்கான கால அளவு 8 வருடங்கள் ஆகும். ஆனால் 5 வது வருடம் முதல் இடையில் வெளியேற முடியும். தங்கப் பத்திரத்தை சமர்ப்பித்து 20,000 ரூபாய் மட்டுமே பணமாகப் பெற முடியும், மிதத் தொகையை வங்கி கணக்கில் அல்லது டிமாண்ட் டிராப்ட்டுகளாம மட்டுமே பெற இயலும்.
50 ரூபாய் ஆஃபர்
சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் சலுகையும் அளிக்கின்றது.
அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்ய முடியும்
தனிநபர் ஒருவரால் அதிகபட்சமாக 500 கிராம் வரை மட்டுமே சவரன் தங்கப் பத்திர திட்டம் மூலமாக முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications