மார்ச் 8ஆம் தேதி மட்டும் கொண்டாட வேண்டியவர்கள் இல்லை பெண்கள், வருடம் முழுவதும் கொண்டாட வேண்டியவர்கள். இன்று ஆண்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள், 24 மணிநேரமும் உழைக்கிறார்கள் என்று கூறுவதிற்குப் பின்னால் நம் வீட்டில் தாயின் வடிவிலோ, மனைவியின் வடிவிலோ, சகோதரியின் வடிவிலோ ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்நிலையில், பெண்களை தெய்வமாகப் போற்றக்கூடிய இந்தியாவிலேயே அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு இன்றளவிலும் இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையைக் கூடிய விரைவில் மாற நாம் அனைவரும் ஒன்றுகூடிச் செயல்படுவோம்.
பெண்கள் தினத்தில், பெண்கள் குறித்தும் அவர்களுக்குத் தேவைப்படும் சில முக்கியக் கட்டுரைகளைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தொகுத்துள்ளது.
கடைசியாகத் தமிழ் பேசும் அனைத்துப் பெண்களுக்குப் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.