இந்தியாவில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்களுக்கு 26 வாரம் பெற்றோர் விடுப்பு கிடைக்கும்..!
அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் ஐகே இந்தியா நிறுவனம் தங்களது ஊழியர்களுக்குத் தங்களது நிறுவனம் விடுமுறை கொள்கையில் புதிய பெற்றோர் விடுப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இதனை அடுத்து இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஆண், பெண் என்று அனைவருக்கும் 6 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பெண்களுக்குக் கூடுதல் விடுமுறை
கூடுதலாகப் பெண் ஊழியர்களுக்கும் 16 வாரங்கள் கூடுதலாக 50 சதவீத பணி நேரத்தையும் குறித்துள்ளது இந்த ஹெவிவெயிட் ஸ்வீடிஷ் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம்.
ஐகே இந்தியா நிறுவனத்தின் மேலாளர் அண்ணா-கேரின் மான்ஷன் இந்தச் செய்தியை இந்தியாவில் உள்ள எங்களது ஊழியர்கள், ஸ்டோர் திறக்க இருப்பவர்கள் என அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமை படுகின்றேன் என்று கூறியுள்ளார்.
சம வாய்ப்பு
மேலும் அவர் கூறுகையில் சக தொழிலாளர்கள் அதிகாரம் மற்றும் சம வாய்ப்பு போன்றவற்றைச் சரிக்கும் சமமாக அனைத்து ஊழியர்களுக்கு வழங்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
குழந்தை தத்து எடுப்பவர்களுக்கும் இதே கொள்கை
இந்தப் புதிய பெற்றோர் விடுமுறை கொள்கை ஒற்றைப் பெற்றோர் மற்றும் குழந்தை தத்து எடுப்பவர்கள் என அனைவருக்கும் பொருந்து என்று கூறினார்.
பெண்களுக்கு வேலை நேரம் குறைப்பு
பெண் ஊழியர்கள் பெறக்கூடிய கூடுதல் வேலை நேரக் குறைப்பு மட்டும் இல்லாமல் கருத்தடை சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் அதற்கும் 2 வாரங்கள் கூடுதல் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படுமாம்.
கர்ப்பகாலச் சிக்கலின் போது
அதுமட்டும் இல்லாமல் கற்பக் குறைபாடுகளால் உடல் நலக் குறைவு, முன்கூடிய குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிக்கல் போன்றவற்றின் போது ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும்.
பாலினச் சமநிலை
50/50 பாலினச் சமநிலையுடன் அதன் பலன்களை அனுபவிக்க ஐகே இந்தக் கொள்கையை உருவாக்கியுள்ளது. குழந்தைகளைப் பகல் நேரத்தில் பார்த்துக்கொள்ள ஏற்பாடு, குடும்பத்துடன் நீண்ட கால நிறுவனத்தில் பணிபுரிய பல நடவடிக்கைகளை இந்த நிறுவனம் எடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் ‘மகப்பேறு உதவி மசோதா’
வேலை செய்யும் பெண்களுக்கான மகப்பேறு நன்மை மசோதா 2016-ஐ அன்மையில் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றப்பட்டு முதல் இரண்டு குழந்தைகளுக்கு 12 வாரங்களாக இருந்த விடுமுறை காலம் 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதும் மேலும் முழு விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications