மோசடியாளர்களுக்கு ஜாமீன் கிடையாது.. கைது செய்ய வாரன்ட் கூடத் தேவையில்லை: ஜிஎஸ்டி
இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 290 புள்ளிகள் வரை உயர்வடைந்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்பவர்கள் ஜாமீனில் வெளிவராத குற்றமாகக் கருதப்படுவார்கள். மேலும் கைது செய்யக் காவல் துறைக்குப் பிடி வாரன்ட் தேவையில்லை, நேரடியாகக் கைது செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய்
சென்டரல் ஜிஎஸ்டி சட்டதிட்டத்தின் பிடி வரிகளுக்கு உட்பட்ட சரக்கு மற்றும்/அல்லது சேவையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்தாலோ, முறைகேடான பணத்தைப் பெற்றாலோ அவை ஜாமீனில் வெளிவராத குற்றமாகக் கருதப்படும்.
25,000 அபராதம்
மேலும் கைது செய்யப்பட்ட நபர் 24 மணிநேரத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அமைப்புகள் சமன் அனுப்பபட்ட அந்த நபர் அதிகாரி முன் ஆஜராகவிட்டால் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அமைப்புகள்
மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி சட்டங்கள் காவல் துறை, ரயில்வே, சுங்கத்துறை, கிராம அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அமைப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1
ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் இருக்கும் கலால் வரி, சேவை வரி, வாட் வரி மற்றும் பிற உள்ளூர் வரி என அனைத்தையும் நீக்கும் ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications