9 மாத சம்பளத்தை வாங்கி கொண்டு ராஜினாமா செய்யுங்கள்.. காக்னிசன்ட் மூத்த அதிகாரிகள் அதிர்ச்சி..!
சென்னை: காக்னிசன்ட் நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் அழுத்தத்தால் காக்னிசன்ட் டெக்னாலஜி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் மூத்த ஊழியர்களுக்குக் கோல்டன் ஹேண்ட்ஷேக் வழங்கியுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது நிறுவனத்தின் டி+ அதிகாரிகளான இயக்குநர்கள், மூத்த துணை அதிகாரிகள் ஆகியோருக்கு 9 மாத சம்பளத்தை வாங்கி கொண்டு விருப்ப ஓய்வு பெற்றுச் செய்யுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
1,000 ஊழியர்கள் வெளியேற வாய்ப்பு
இந்த முடிவினால் காக்னிசன்ட் நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 1,000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என்று தெரிகின்றது. ஆனால் காக்னிசன்ட் நிறுவனம் எத்தனை ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று தெரிவிக்கவில்லை.
காக்னிசன்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் அறிவிப்பு
காக்னிசன்ட் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் மொத்த ஊழியர்களில் சிறிதளவு குறைக்கு முடிவு செய்துள்ளதாகவும், அதற்காகச் சில தகுதி வாய்ந்த தலைவர்களுக்கு ஒரு விருப்ப ஓய்வு ஊக்குவிப்பு வழங்குகிறோம். இது டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் உயர்தர, நிலையான வளர்ச்சியை வழங்குவதற்கும் எங்கள் ஒட்டுமொத்த நிறுவனத்தின் மூலோபாயத்துடன் தொடர்புடையது "என்று காக்னிசண்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மூன்று மடங்கு சர்ந்த வளர்ச்சி
கடந்த 20 வருடங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த காக்னிசன்ட் நிறுவனத்திற்கு வளர்ச்சி பாதையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது. சென்ற மூன்று ஆண்டுகளில் காக்னிசன்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மூன்று மடங்கு குறைந்துள்ளது.
2016-ம் நிதி ஆண்டு லாபம்
2015-ம் ஆண்டு 12.42 பில்லியன் டாலர் வரை லாபம் பெற்ற நிறுவனம், 2016-ம் ஆண்டு 8.6 சதவீதம் உயர்ந்து 13.5 பில்லியன் டாலர் வருவாய்ப் பெற்றது. எனினும் இந்த நிறுவனம் 2017-ம் ஆண்டு 14.5 முதல் 14.84 பில்லியன் டாலர் வரை வருவாய் பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளது.
சரிந்த வளர்ச்சி
காக்னிசன்ட் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதை உணர்ந்துள்ளனர். காக்னிசன்ட் வரலாற்றில் முதல் முறையாகச் சிறந்த செயல் திறன் படைத்த ஊழியர்கள் 95 சதவீத ஊக்கத்தொகை பெற்றுள்ளதாகவும் இதற்கு முன்பு எல்லாம் 150 முதல் 200 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கியுள்ளதாகவும் இது நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதை அப்படமாகக் காண்பிக்கின்றது என்கின்றனர் ஊழியர்கள்.
ஊக்கத்தொகை
உலகளவில் இந்தியா காக்னிசன்ட் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 2009 முதல் 2015-ம் ஆண்டு வரை நன்கு செயல்புரிந்த ஊழியர்களுக்கு 100 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கியது. 2015-ம் ஆண்டு 190 சதவீதம் வரை ஊழியர்கள் ஊக்கத்தொகை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications