இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாக விளங்குகிறது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி. இது நாட்டின் மறைமுக வரி விதிப்பையே முற்றிலுமாக மாற்றி ஒன்றை விரி விதிப்பாகக் கொண்டு வரப்படுகிறது.
எதிர்ப்புகள், மாற்றங்கள் எனப் பல தடுப்புகளைத் தாண்டில் ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளது.
100 பொருட்கள்
இத்தகைய பெரும் வரி மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலையில் சுமார் 100 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சேவைகளைத் திட்டமிடப்பட்டுக் குறைவான வரி விதிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநிலம்
தற்போதைய நிலையில் மத்திய அரசு 299 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, மாநில அரசு 99 பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்னும் தொடரும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
முக்கியப் பொருட்கள்
ஜிஎஸ்டி வரி விலக்கு பெறும் பொருட்களின் பட்டியலை மத்திய அரசும் இன்னும் வெளியிடாத நிலையில், தற்போது இருக்கும் விரி விதிப்பில் அதிகளவில் நுகர்வோர் பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது.
இதில் உப்பு, பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பால், முட்டை, டீ, காஃபி, கோவில்களில் விற்கப்படும் பிரசாதம் ஆகியவைற்றிக்கு எவ்விதமான வரியுமில்லை.
சேவை பிரிவு
மேலே உள்ள பொருட்கள் அனைத்தும் சரக்குப் பிரிவில் இடம்பெறும் நிலையில், சேவைப் பிரிவிலும் பலவற்றிற்க்கு வரி விலக்கு உண்டு.
குறிப்பாகப் பட்ஜெட் ஹோட்டல்களில் 1000 ரூபாய்க்குக் குறைவாக இருக்கும் பில்களுக்குச் சேவை வரி கிடையாது.
முக்கியமானவை
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு வரி விதிக்கப்படுமா என்பதை ஜிஎஸ்டி அமைப்பு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யும்.
4 வரி விதிப்புகள்
ஜிஎஸ்டி வரியில் 4 கட்ட வரி விதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவை அடங்கும்.