ஏற்கனவே வங்கிகளில் பரிமாற்ற கட்டணங்கள் என்ற பெயரில் அதிகளவிலான கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் அது மேலும் அதிகரிக்க உள்ளது.
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் சேவைகளுக்கு 15 சதவீத வரி வசூலிக்கப்படும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 18 சதவீதம் அளவிலான வரியை வசூலிக்கப் போகிறது வங்கிகள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தற்போது வங்கிகளுக்கு நீங்கள் கட்டணமாக (charges/fees) செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் கூடுதலாக 3 ரூபாயைச் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி தனது கட்டணங்களை உயர்த்தியது, குறிப்பாக ஏடிஎம் பயன்பாட்டுக்கும், கணக்கு குறைந்தபட்ச இருப்பு வைத்துக்கொள்ளவும் எனப் பல புதிய கட்டணங்களை அறிவித்தது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளும் கட்டணத்தை உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.