சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் போது ரயில் பயணிகளின் ஏசி மற்றும் முதல் வகுப்பு டிக்கெட் கட்டணங்கள் உயருகின்றது.
ரயில் டிக்கெட் மீதான சேவை வரித் தற்போது 4.5 சதவீதமாக உள்ளது, இதுவே ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது 5 சதவீதமாக வரி உயர்த்தப்படுகின்றது.
ஏசி மற்றும் முதல் வகுப்பு
ரயில் டிக்கெட் கட்டணங்களில் ஏசி மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்களுக்கு மட்டும் தான் சேவை வரி உள்ளது. அதனால் டிக்கெட் கட்டணம் 2,000 ரூபாய் என்றால் 2,010 ரூபாயாக அடுத்த மாதம் உயரும் என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
ரயில்வே நிர்வாகம்
ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாரிகளை நேரடியாக நியமித்துள்ளது.
ஆலோசகர்கள்
ஜிஎஸ்டி வரி அமைப்பை ரயில்வே நிர்வாகத்தில் அறிமுகப்படுத்தும் விதமாகவும், அதில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் விதமாகவும் இந்திய ரயில்வே நிர்வாகம் ஆலோசகர்களையும் நியமித்துள்ளது.
பான் எண்
ஜிஎஸ்டிக்குப் பதிவு செய்வது பான் விவரங்கள் அடிப்படையில் என்பதால் ரயில்வே ஏற்னவே பான் எண்ணைப் பெற்றுள்ளது.
முதன்மை அதிகாரிகள்
ரயில்வேயின் ஒவ்வொரு மண்டல பொது மேலாளர்களை ஜிஎஸ்டி இணக்கத்தைக் கவனித்துக்கொள்வதற்கு முதன்மை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐடி மையம்
இரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம், இந்திய இரயில்வேயின் தகவல் தொழில்நுட்பம், சரக்கு மற்றும் பயணிகளைப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பொருத்தமான மென்பொருள் மாற்றங்களைச் செய்வதற்கான செயல்முறை நடந்து வருகின்றது.
கணினி மையம்
இரயில்வேயின் பெரிய பரிவர்த்தனைகள் கணினிமயமாக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் இன்னும் ஆஃப்-லைனில் செய்து வருகின்றார்கள். அவற்றைக் கணினி மையமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications