டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றிய பின் முதல் முறையாகப் பிரதமர் மோடி அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளின் நட்புறவு மேம்படுத்தும் வகையிலும், நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்து வகையிலும் அதிநவீன ஆள்ளில்லா ட்ரோன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒன்னு இல்ல ரென்டில்ல மொத்தம் 22 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓபாமா முதல் டிரம்ப் வரை...
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மத்தியிலான நட்புறவு, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஓபாமா தலைமையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் சாதகமாகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டிரம்ப் தலைமையில் இந்த நிலை முற்றிலுமாக மாறி தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே உள்ளது.
ஒப்பந்தமும், சந்திப்பும்
இந்நிலையில் இந்த ஒப்பந்தமும், சந்திப்பும் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான நட்புறவு மேம்படும் வகையில் அமையும் என இந்திய அரசு அமைகிறது.
இந்திய கடற்படை
இந்திய பெருங்கடலை இந்திய கடற்படை துல்லியமாக்க 24 மணிநேரமும், கண்காணிக்கும் வகையில் இந்த அதிநவீன 22 ஆள்ளில்லா ட்ரோன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் NATO அமைப்பில் இல்லாத நாடான அமெரிக்காவுடன் இந்தியா முதல் முறையாக ஆயுதங்களை வாங்குகிறது.
அமெரிக்காவின் தயாரிப்பு
இந்த ஆள்ளில்லா ட்ரோன் விமானத்தின் பெயர் தி கார்டியன் அன்மேன்டு ஏர்கிராப்ட் சிஸ்டம், இதனை ஜெனரல் ஆட்டோமிகஸ் ஆரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.