எந்தப் பொருட்களை வாங்க வேண்டும், எந்த விலையில் வாங்கினால் கட்டுப்படி ஆகும் என்பது எல்லாம் ஒருவருடைய பட்ஜெட்டினை பொருத்து. ஆனால் இப்போது ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர இருப்பதினால் வாடிக்கையாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருக்கக் கூடும்.
ஆம், இது வரை நாம் அதிக விலை கொடுத்து வாங்கி வந்த சில பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதினால் விலை குறைய வாய்ப்புள்ளது. அதே நேரம் சில பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி அதிகரிப்பதினால் விலை கூடவும் செய்யும்.
பழம், காய் கறிகள், பருப்பு வகைகள், கோதுமை, பிரெட் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் மீதான் வரி நீக்கப்பட்டுள்ளதால் விலை குறையும். ஆனால் ஒரு பக்கம் சிப்ஸ், பிஸ்கேட், பட்டர், டீ, காபி உள்ளிட்ட பொருட்கள் மீதான விலை அதிகரிக்கும்.
எனவே இங்கு எந்தச் சரக்குப் பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி ஏழை, நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரி எப்படி எல்லாம் பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம்.
கல்வி
கல்விக்கு 5,000 ரூபாய் செலவு செய்கின்றீர்கள் என்றால் அடுத்த மாதம் முதல் 5,100 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
வீட்டுக் கடன் மீதான தவனை
வீட்டுக் கடன் பெற்றுள்ளீர்கள் என்றால் அதன் மீதான தவனம் 25,000 ரூபாய் என்றால் அது 25,750 ரூபாயாக அதிகரிக்கும்.
மொபைல் மற்றும் மின்சாரக் கட்டணம்
மின்சாரம்,, மொபைல், இணையதளம் உள்ளிட்ட பில்களின் கட்டணத்திற்குச் சேவை வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுவதால் இதன் மீதான உங்களின் சலவு அதிகரிக்கும்.
வாகன கடன்
கார், பைக் உள்ளிட்டவையினைக் கடன் வாங்கிப் பெற்று இருக்கும் போது தவனைக் கட்டணம் 5,500 ரூபாய் என்றால் 2,335 ரூபாயாகக் குறைந்து இருக்கும்.
டி, காபி உள்ளிட்ட பானங்கள்
டீ, காபி, பட்டட், பிஸ்கேட், தயிர், ஐஸ் கிரீம், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இது வரை நீங்கள் 850 ரூபாய் செலவு செய்து வந்திருந்தால் அடுத்த மாதம் முதல் 808 ரூபாயாகக் குறையும்.
சோப்பு
சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 500 ரூபாய் செலவு செய்து வந்திருந்தால் 440 ரூபாயாகச் செலவுகள் குறையும்.
பொழுதுபோக்கு
சினிமா, டிவி உள்ளிட்டவற்றுக்கு 2,400 ரூபாய் செலவு செய்து வந்துள்ளீர்கள் என்றால் அது 2,304 ரூபாயாகக் குறையும்.
இந்திய நிறுவனம்
ஜூலை 1
ஊழியர்கள் அதிர்ச்சி
சோகம்
9 வருடமாக சம்பள உயர்வு இல்லை.. இது ரிலையன்ஸ் உயர் அதிகாரியின் சோகம்..!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications