ஏப்ரல் மாதம் அமலாக்கம் செய்யப்பட வேண்டிய ஜிஎஸ்டி ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை முழுமையாக அனைத்து மாநிலங்களின் ஒப்புதல்களுடன் நடைமுறைக்கு வர உள்ளது ஜிஎஸ்டி.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜிஎஸ்டி குறித்துச் செய்திகள் நம்மைப் பயம்புறுத்தி வந்த நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சொல்லப்போனால் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் என அனைவரும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலிகளைச் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க இக்கட்டுரை ஏதுவாக இருக்கும்.
கேம் சேஞ்சர்
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின் நாட்டின் வரியமைப்பில் செய்யப்பட உள்ள மிகப்பெரிய மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நாட்டின் வரி-ஜிடிபி மத்தியிலான பங்கீடு விகிதங்கள் 2 சதவீதங்கள் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை என்ன நடக்கும்...
ஜிஎஸ்டி நாளை அமலாக்கம் செய்யப்பட்டாலும், இதன் நன்மைகள் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் வர்த்தகச் சந்தையிலும், வர்த்தக முறையிலும் பல முக்கிய மாற்றங்கள் நாளை முதல் நிகழ்ந்தேறும்..
அவற்றைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஜிஎஸ்டி குறித்த புரிதல்...
தற்போதைய நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த முழுமையான புரிதல் யாரிடமும் இல்லை என்பதால், அனைவரும் பெரிய நிறுவனங்களையும், அதன் மென்பொருளையும் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை.
இந்திய வர்த்தகச் சந்தையில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் மென்பொருள் பயன்படுத்தி வர்த்தக நடத்த முடியாது. இதனால் இவர்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கும். இதன் தொடர்ச்சியாகச் சிறிய நிறுவனங்களை நம்பியிருக்கும் நடுத்தர நிறுவனங்களும் தடுமாறும் நிலை உருவாகும்.
சப்ளை செயின் பாதிப்பு...
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் சப்ளை செயின் அடுத்தச் சில வாரங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். இதற்குக் காரணம் சப்ளை செயின் நிறுவனங்கள் வரி தாக்கல் மற்றும் உள்ளீடு வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதால் இத்துறை சேவை அதிகவில் பாதிக்கும்.
ஆனால் இந்தப் பாதிப்புத் தற்காலிகமானதே. விரைவில் இது சீரடையும், இதனால் நிறுவனங்களுக்கான உற்பத்தி பொருட்களின் இருப்புப் பாதிக்கப்படலாம்.
வர்த்தகர்கள் - நுகர்வோர்
நுகர்வோர் சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் சரக்குகளை விற்றுத் தீர்க்க பல வழிகளில் தள்ளுபடி, ஆஃபர்கள் மூலம் தீர்த்து வரும் நிலையில், ஜூன் 1க்குப் பின் வர்த்தகர்கள் - நுகர்வோர் மத்தியிலான வர்த்தகம் தொய்வடையும்.
வேலை மூலதனம்
உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மத்தியில் அடுத்தச் சில மாதங்களுக்கு வொர்கிங் கேபிடல் அதாவது வேலை மூலதனத்தில் பெரிய அளவிலான பிரச்சனையைச் சந்திக்கும்.
பணப்புழக்கத்தில் ஏற்படும் பாதிப்பு நிறுவனங்களில் அடுத்த 4 மாதங்கள் வரை நீடிக்கலாம். காரணம் உள்ளீடு (Input) மற்றும் வெளியே (Output) செல்லும் பொருட்களுக்கான நிதி பங்கீடு இக்காலகட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்படும். மேலும் நிறுவனங்கள் தணிக்கை செய்யச் சில காலம் தேவைப்படும் காரணத்தால் அடுத்தச் சில மாதங்களுக்கு இந்தப் பாதிப்பு நிலவும்.
எரிபொருள்
எண்ணெய் மற்றும் எரிபொருள் சந்தையில் சில பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்குத் தணிக்கை மற்றும் விற்பனையில் பல சந்தேகங்கள் எழும்.
யார் இவர்கள்
கடிவாளம்
கார், பைக் விலை பட்டியல்
இம்சை
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications