ஜிஎஸ்டி அமலக்காத்தின் மூலம் இந்தியாவின் ஜிடிபி மிகப்பெரிய அளவில் உயரும் என அனைத்துத் தரப்பினர் பேசி வரும் நிலையில், பிபெக் டீப்ராய் அதை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் திங் டாங்க் அமைப்பான நித்தி அயோக்-இன் உறுப்பினர் மற்றும் முன்னணி பொருளாதார வல்லுனரான பிபெக் டீப்ராய், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வாயிலாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை உயரும் என்ற கருத்து மிகவும் முட்டாள்தனமானது எனக் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து 13வது நிதியியல் கமிஷன் ஆய்வறிக்கை வைத்து வெளியானது. ஆனால் உண்மையில் இது சாத்தியமில்லை.
இதேபோன்ற கருத்தை தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நிதியமைச்சகத்தின் செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா அவர்களும் தெரிவித்தார்.