ஒரு ஜோடி செருப்பை சேர்த்து வாங்கினால் 12% வரி, தனித்தனியாக வாங்கினால் 5% வரி: ஜிஎஸ்டி கலகல

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சில பொருட்களின் விலை ஒரு பக்கம் குறைந்து இருந்தாலும் மறுபக்கம் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒரு சில பொருட்களுக்கு விலை அதிகமாக இருந்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி விகிதமும், விலை குறைவாக இருந்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி விகிதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தங்களுக்குச் சாதகமாக நமது சென்னையைச் சேர்ந்த சில கடைக்காரர்கள் செய்து காட்டி வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி குறைந்தபட்ச வரி விகிதத்திலேயே விற்கலாம் என்ற வாழைப் பழம் காமெடியில் வரும் செந்தில் போன்றே நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த வரி ஏய்ப்பு முறை அனைத்துப் பொருட்களுக்கும் செய்ய முடியாது என்றாலும் சில பொருட்கள் மீதான வரியைக் குறைக்க உதவும். அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

காலணிகள் கடைக்காரர்

காலணிகள் கடைக்காரர்

சென்னை சேர்ந்த ஒரு செறுப்பு கடைக்காரர் ஒரு ஜோடி செருப்பு வாங்கினால் இரண்டு செறுப்பிற்கும் தனித் தனியாகப் பில் செய்து வரியைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை சேர்த்துள்ளார்.

ஜவுளி

ஜவுளி

இதுவே ஒரு ஜவுளி ஆடைகள் டீலர் தான் விற்கும் சுடிதார்களை டாப்ஸ், துப்பட்டா, பேண்ட் என மூன்றையும் தனித்தனியாகப் பில் செய்து விலை குறைத்து வணிகர்களுக்கு அளித்துள்ளார்.

பாஸ்மதி அரசி

பாஸ்மதி அரசி

பாஸ்மதி அரசி வணிகர் ஒருவர் டிரேடு மார்க் உள்ள அரிசிக்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்பதாலும், டிரேடு மார்க் இல்லாத அரிசிக்கு வரி இல்லாததினாலும் தானது டிரேடு மார்க்கை வேண்டாம் என்று திருப்பி அளித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு நன்மை

வாடிக்கையாளர்களுக்கு நன்மை

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் வணிகர்கள் பல புதிய உத்திகளைப் பயன்படுத்தி வரி விகிதத்தைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மையைச் சேர்த்து வருகின்றனர் என்று கூறலாம்.

 

 

காலிணிகள் மற்றும் ஜவுளி வரி விகிதம் எவ்வளவு?

காலிணிகள் மற்றும் ஜவுளி வரி விகிதம் எவ்வளவு?

வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் வணிகர்கள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனால் ஜிஎஸ்டி-ன் கீழ் 500 ரூபாய்க்குச் செருப்பு வாங்கினால் 5 சதவீதம் வரி. இதுவே வாட் இருந்தபோது 18 சதவீதமாக இருந்தது. இப்போது 1000 ரூபாய்க்கு மேல் விலை கொடுத்துச் செறுப்பு இருந்தால் 12 சதவீதம் வரி செலுத்து வேண்டும். இதுவே ஜோடியினைத் தனித்தனியாகப் பிரித்து விற்றால் 1-ன் விலை 1000 ரூபாயினை விடக் குறையும், வரியும் குறையும்.

இரட்டை விகிதத்தால் வந்த சிக்கல்

இரட்டை விகிதத்தால் வந்த சிக்கல்

இந்த வரி ஏய்ப்பு எப்படி இரட்டை எம்ஆர்பி விலையில் நிறுவனங்கள் லாபம் அடைந்தனவோ அதே போன்று இதில் வாடிக்கையாளர்களைக் கவர கடைக்காரர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

வரி விகிதங்கள்

வரி விகிதங்கள்

ஜிஎஸ்டி-ன் கீழ் மத்திய அரசு 0, 5, 12, 18, மற்றும் 28+செஸ் வரி எனப் பல வரி விகிதங்களில் அறிவித்ததினால் தான் நடக்கின்றது.

ஜிஎஸ்டி கவின்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவின்சில் கூட்டம்

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வரி விகிதங்கள் குறித்து மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அருண் ஜேட்லி கூறியிருக்கும் நிலையில் இதன் மீதும் விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big loopholes found by traders to pay less in GST

Big loopholes found by trades to pay less in GST
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X