இந்தியாவில் சுயமாக மல்டி மில்லியனராக வளர்ந்துள்ள யோகா குரு பாபா ராம்தேவின் சமீபத்திய வணிக நடவடிக்கை பற்றி இங்குப் பார்க்க இருக்கின்றோம். இப்போது ரூ. 40,000 கோடி மதிப்பிலான தனியார் பாதுகாப்புச் சந்தையில் இந்தத் துறவி ஈடுபட இருக்கின்றார்.
நாம் அவரது அன்மை கால நடவடிக்கைகளை ஆய்வு செய்யச் சென்றால், அது நமக்குப் பல ஆச்சர்ய தகவல்களை அளிக்கின்றது.
10,000 கோடி ரூபாய்
வருடந்தோறும் தனது நிறுவனத்தின் லாப கணக்குகளை அறிவிக்கும் போது பெற்ற லாபத்தினை விட இரண்டு மடங்கு கூடுதல் இலக்கை வைத்து அடுத்த ஆண்டுக்கான இலக்கை நிர்ணைக்கின்றார். அதனையும் அடையவும் செய்கின்றார்.
கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
யோகா குரு தனது நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் சந்தையினை விரிவு படுத்தி வருகின்றார்.
ராம்தேவ் ஏற்கனவே தனது போட்டியாளர்கள் கார்ப்ரேட் நிறுவனங்கள் தான தனது முக்கியப் போட்டி நிறுவனங்கள் என்றும் அவற்றுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
திட்டம்
பாபா ராம்தேவ் தானது நிறுவனங்கள் செயல்பட்டு வரும் மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்திரபிரதசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் மிகப் பெரிய தயாரிப்புகளைத் துவங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த ஆலைகள் துவங்கப்பட்டால் தற்போது உள்ள 35,000 கோடி சந்தைக்கு இணையாக 60,000 கோடி ரூபாய் சந்தையினை இவர் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
சந்தையின் குரு
புத்திசாலித்தனமான வணிக உத்திகள் எஃப்எம்சிஜி சந்தையில் பெறும் வளர்ச்சியை இவருக்கு அளித்துள்ளது. 2015-2016 நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் பெற்ற இந்த நிறுவனம் 2016-2016 நிதி ஆண்டில் 10,000 கோடியாக உயர்த்திக் காட்டியுள்ளது.
ஐபிஓ
2020-ம் ஆண்டிற்குள் 20,000 கோடி ரூபாய் வருவாய் பெற வேண்டும் என்ற இலக்குடன் பதஞ்சலி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. விரைவில் ஐபிஓ-ல் பங்குகளை வெளியிடத் திட்டம் தீட்டி வருவதாகவும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வணிகர்களுக்காகச் சாதகமான பேச்சு
அனைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பாபா ராம்தேவ் இந்திய வணிகர்களை ஆதரித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்றத்தில் வணிகர்களைத் தவறான முறையில் பேசுவது தவறு என்றும், அவர்களுடைய வரிகள் தான் உங்களுக்கு வேண்டும், அவர்கள் நிதியைத் தான் நீங்கள் தேர்தலுக்குப் பெறுகின்றீர்கள், அவர்களைச் சபிக்கக் கூடாது, அனைத்துத் தொழிலதிபர்களும் திருடர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.