மூன்று வருடத்தில் 180 கோடியை பறிகொடுத்த இந்திய வங்கிகள்.. என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள 51 வங்கிகளிலும் 2014-2015, 2016-2017 எனக் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் திருட்டு, மோசடி, கொள்ளை என 2,632 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

அதில் என்ன சிக்கல் என்றால் வங்கிகளுக்கு இந்தப் புகார்களினால் 180 கோடி வரை நட்டம் என்பது ஆகும். இதனை நேற்றைய மக்களவை கூட்டத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

கடந்த மூன்று நிதியாண்டில் வங்கிகளில் 344 திருட்டு, கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.30 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று மாநிலங்களவை நிதி அமைச்சர் சந்தோஷ் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பாங்க் ஆ பரோடா

பாங்க் ஆ பரோடா

பாங்க் ஆ பரோடா வங்கி 188 புகர்களினால் 13 கோடிகள் வரை இழப்பைச் சந்தித்துள்ளது.

தனியார் துறை வங்கிகள்

தனியார் துறை வங்கிகள்

தனியார் துறை வங்கிகளில் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி உள்ளிட்டவற்றிற்கு முறையே 17.25 கோடி, 37.34 கோடி மற்றும் 10.21 கோடி இழப்பு நேர்ந்துள்ளது.

ஆர்பிஐ கோரிக்கை

ஆர்பிஐ கோரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே இந்த வங்கிகளுக்குத் தங்களது வங்கி மற்றும் ஏடிஎம் கிளைகளில் பாதுகாப்பு ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது என்று கோரிக்கை வைத்துள்ளதாகக் கங்வார் தெரிவித்தார்.

மேலும் ஆர்பிஐ வங்கிகளிடம் ஏதேனும் திருட்டு, மோசடி, கொள்ளைப் புகார்கள் மற்றும் சம்பவங்கள், வங்கி லாக்கர் சேவையில் திருட்டு நேர்ந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

 

இழப்பீடு

இழப்பீடு

வங்கி லாக்கர்களில் இருந்து பொருட்களைக் காணாமல் போகும் போது வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடவில்லை.

பாதுகாப்பை உறுதி செய்வது வங்கிகளின் கடமை

பாதுகாப்பை உறுதி செய்வது வங்கிகளின் கடமை

"இருப்பினும், வங்கிகள் லாக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது வங்கிகளின் பொறுப்பு என்றும், லாக்கர் வைத்திருப்பவர்கள் கோரிக்கைகளுக்குப் பொறுப்பாக வங்கிகளுக்கு வழங்கக்கூடிய லாக்கருடைய பாதுகாப்பிற்காக எந்தவித தயக்கமும் இல்லை என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks lost Rs 180 cr to dacoity, burglaries in 3 years

Banks lost Rs 180 cr to dacoity, burglaries in 3 years
Story first published: Thursday, July 20, 2017, 13:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X