துபாய்: இந்தியர்கள் மீண்டும் துபாயில் இருந்து தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையில் தங்கம் மீது 3 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளதால் துபாயில் தங்கம் வாங்குவது லாபகரமாக உள்ளதாக இந்தியர்கள் கருதுகின்றனர்.
ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து துபாய் வரும் இந்தியர்கள், என்ஆர்ஐ உள்ளிட்டோர் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக நகை கடைகள் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஜிஎஸ்டிக்குப் பின் அதிகரித்த விற்பானை
சவுதி தங்க சந்தையில் இரண்டு வாரங்களாக விற்பனை பயங்கரமாகச் சூடு பிடித்துள்ளது. அப்போது அதிகமாக இந்தியர்கள் தான் தங்கம் வாங்கியுள்ளனர் என்று மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் நிறுவன தலைவர் அகமது எம்பி கூறினார்.
முன்று வகை இந்தியர்கள்
துபாயினைப் பொருத்த வரையில் மூன்று விதமாக இந்தியர்கள் தங்கம் வாங்குகின்றனர். வளைகுடா நாடுகளில் குடியேறிய இந்தியர்கள், இந்திய சுற்றுலா பயணிகள், பயணத்தின் போது இடையில் சவுதி வந்து செல்பவர்கள்.
பிற நாட்டவர்கள்
சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாட்டினவரும் அன்மை காலங்களில் துபாயில் தங்கம் வாங்குவதினை அதிகரித்துள்ளதாக அகமது கூறினார்.
எவ்வளவு விற்பனை அதிகரித்துள்ளது
துபாயில் தங்கம் வாங்குவது 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக நகை கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய நகைகள் விரைவில் துபாயில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பாப்லி சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் கூறுகின்றார்.
இந்தியாவில் விலை எவ்வளவு அதிகம்
துபாயில் தங்கம் வாங்குவதை விட இந்தியாவில் தங்கம் வாங்கும் போது 10 கிராமிற்கு 3,600 ரூபாய்க் கூடுதலாக விலை கொடுத்து இந்தியர்கள் வாங்குகின்றனர்.
இந்திய விலை ஒப்பீடு
இந்தியாவின் ஜவேரி பஜாரில் தங்கம் வாங்கும் போது 10 கிராம் தங்கம் 29,210 ரூபாய் ஆகும். இதில் ஜிஎஸ்டி, இறக்குமதி வரி ஆகியவை அடங்கும். இதுவே துபாயில் நீங்கள் தங்கம் வாங்கினால் 25,524 ரூபாய்க்கு 10 கிராம் தங்கம் வாங்க முடியும்.
துபாயில் வாட்
2018 ஜனவரி முதல் துபாயில் 5 சதவீதம் வாட் வரி நியமிக்க இருப்பதால் தங்கம் விலை உயரும் என்றும், இந்தியாவில் பெறும் பாதிப்பு ஏற்படும் என்றும் விலை உயரும் வல்லுநர்கள்
ஐடி துறையில் இந்த ..." data-gal-src="http:///img/600x100/2017/07/itemployee-23-1500831234.jpg">