எஸ்பிஐ வங்கிக்கு வந்த புதிய பிரச்சனை..!

இந்திய பொதுத்துறை வங்கியின் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் வராக்கடன் அளவில் பெரிய பங்கு வகிக்கிறது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.

நிதியமைச்சகத்தின் தரவுகள் படி நாணயமற்றவர்களாக கருதப்படும் கடனை திருப்பி செலுத்தாவர்களின் கடன் அளவு 92,376 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 76,685 கோடி ரூபாயாக உள்ளது, 2016-17 நிதியாண்டில் இது 20.4 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டும் சுமார் 1,762 நாணயமற்றவர்கள் மூலம் சுமார் 25,104 கோடி ரூபாய் அளவிலான வராக்கடனை பெற்றுள்ளது. இது மொத்த அளவில் சுமார் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மிகப்பெரிய கடன் அளவு எஸ்பிஐ வங்கியின் இருப்பு அறிக்கையில் மிகப்பெபிய ஓட்டையை அடைந்துள்ளது.

 

பஞ்சாப் நேஷ்னல் பாங்க்

பஞ்சாப் நேஷ்னல் பாங்க்

எஸ்பிஐக்கு அடுத்தப்படியாக பஞ்சாப் நேஷ்னல் பாங்க் 1,120 நாணயமற்றவர்கள் மூலம் சுமார் 12,278 கோடி ரூபாய் வராக்கடனை பெற்றுள்ளது.

40 சதவீதம் வராக்கடன்

40 சதவீதம் வராக்கடன்

இவ்விரு வங்கிகளும் மொத்த வராக்கடனில் சுமார் 40 சதவீத கடனான 37,382 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளது.

10 சதவீத வளர்ச்சி

10 சதவீத வளர்ச்சி

2015-16 மற்றும் 2016-17 நிதியாண்டுகள் மத்தியில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் நாணயமற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் மொத்த எண்ணிக்கையின் அளவு 8,167 முதல் 8,915 ஆக உயர்ந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+