சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் மற்றும் மும்பை பங்குச்சந்தை இணைந்து சுமார் 150க்கும் அதிகமான நிறுவனங்களை வர்த்தகம் செய்ய முடிக்கியது. இதில் 19 நிறுவனங்கள் மீது தற்போது சீபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த 19 நிறுவனங்கள் 700 பண பரிமாற்றாங்கள் மூலம் சுமார் 424 கோடி ரூபாய் பணத்தை பண சலவை செய்துள்ளனர்.
சென்னை
2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த பண பரிமாற்றத்தில் சென்னையில் இருக்கும் மின்ட் தெரு பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளை அதிகாரி ஒருவரின் உதவியின் மூலம் இந்த பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த 19 நிறுவனங்களின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்
இந்த 19 நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தக உரிமங்களும் இல்லாமல் ஹாங்காங் நாட்டிற்கு பணத்தை அனுப்பியுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு தற்போது இந்நிறுவனங்கள் மீது சிபஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்பணம்
மேலும் இந்த பண பரிமாற்றத்திற்காக துவங்கப்பட்ட கணக்குகள் அனைத்தும் வர்த்தகத்திற்கான முன்பணம் செலுத்த வேண்டியதற்காக திறக்கப்பட்ட கணக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
RTGS முறை
இதனுடன் இதில் செய்யப்பட்ட பண பரிமாற்றத்திற்கான தொகை 100 சதவீதம் வர்த்தகத்திற்கான முன்பணம் என்பது குறிப்பிடப்பட்டு RTGS முறையில் பணத்தை இந்த 19 நிறுவனங்கள் வெளிநாட்டு கணக்குகளுக்கும் பரிமாற்றம் செய்துள்ளது.