சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு சனிக்கிழமை மோட்டார் வாகனங்கள் மீதான வரியை உயர்த்து கார் வாங்கும் கனவு உடைய மக்களுக்கும் மோசமான மனநிலையை வழங்கிய நிலையில், சமானியர்களுக்கு அதிகளவில் பயன்படும் வகையில் சுமார் 40 முக்கிய பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது.
40 பொருட்கள்
சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் ஆடிப்போன நிலையில், நுகர்வோர் சந்தையில் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது.
முக்கிய பொருட்கள்
வால்னட், துடைப்பம், களிமண் பொம்மைகள், கஷ்டர்டு பவுடன், இட்லி மற்றும் தோசை மாவு, ரப்பர் பேன்ட், ரெயின் கோட்டு, பத்தி, புடவை ஃபால், கம்பியூட்டர் மானிடர், டேபிள் மற்றும் சமையல் அறை பொருட்கள், பாசி மணிகள் ஆகியவற்றின் மீதான வரியை குறைந்துள்ளது.
முழுமையான வரி விலக்கு
காதி பவனில் விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும், களிமண் பொம்மைகளுக்கும் தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் முழுமையான வரி விலக்கு அளித்துள்ளது.
வரி அறிக்கை தாக்கல்
GSTR1 அறிக்கையை வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி நெட்வொர்கள் தளத்தில் தாக்கல் செய்வதில் பல பிரச்சனைகள் சந்தித்து வரும் காரணத்தால், ஏற்கனவே நீக்கப்பட்ட செப்டம்ர் 10 வரையிலான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு ஆக்டோபர் 10 அவகாசம் அளிக்கத்துள்ளது நிதியமைச்சகம். இதற்கான அறிவிப்பையும் சனிக்கிழமை வெளியிட்டது ஜிஎஸ்டி கவுன்சில்.