இந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதின் உண்மை பின்னணி..!

By கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகமதாபாத்: இந்தியாவின் 164 வருட ரயில்வே துறையை முழுமையாக மாற்றப்போகும் இந்தப் புல்லட் ரயில் சுமார் 1.10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த மொத்த தொகையில் சுமார் 65 சதவீதம் அதாவது 88,000 கோடி ரூபாய் ஜப்பான் அரசே கடனாக இந்தியாவிற்குக் கொடுத்து இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை ஜப்பான் கொடுத்து, இந்தியாவில் புல்லட் ரயில் அமைக்க என்ன காரணம்..?

ஜப்பான்

ஜப்பான்

புல்லட் ரயிலை இயக்குவதிலும், அதன் தொழில்நுட்பத்தைச் சிறப்பான முறையில் உருவாக்குவதில் உலகளவில் கைதேர்ந்த ஒரு நாடு என்றால் அது ஜப்பான் தான், இதில் இவ்விதமான சந்தேகமுமில்லை.

ஜப்பான் நாட்டில் புல்லட் ரயில் அறிமுகம் செய்த நாளில் இருந்து இந்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு விரிவாக்கப் பணிகளை முழுமையாக முடித்து முழு வடிவம் பெற்றுள்ளது. இதன் காரணமாகத் தனது தொழில்நுட்பத்தையும் சேவையும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்து இதன் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை ஈட்ட ஜப்பான் பல வருடங்களாகத் திட்டமிட்டு வருகிறது.

 

அதிக முதலீடு

அதிக முதலீடு

புல்லட் ரயில் பிற இன்பஃராஸ்டக்சர் திட்டங்களை விடவும் சற்று கூடுதல் முதலீடு தேவைப்படும் ஒரு திட்டமாக உள்ளது. இதனால் வல்லரசு நாடுகளை முதலில் குறிவைத்து ஜப்பான் தனது தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இத்திட்டத்தில் முதல் கட்டத்தில், ஏற்கனவே சப்வே ரயில் சேவையில் முழுமையாக இணைக்கப்பட்ட பிரட்டன் நாட்டைத் தனது இலக்கில் இருந்து நீக்கிய ஜப்பான் அமெரிக்காவைக் குறிவைத்தது.

 

அமெரிக்கா
 

அமெரிக்கா

ஜப்பான் அரசும், ரயில் நிறுவனங்களும் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தனது புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனப் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையில் தோல்வியை மட்டுமே சந்திக்கிறது ஜப்பான்.

அமெரிக்காவில் இருக்கும் ரயில்களின் அதிகப்படியான வேகமே 125Kmph தான், இது ஜப்பான் நாட்டின் 400Kmph அளவை விடவும் மிகவும் பின்தங்கியதாகவே அன்றளவிலும் உள்ளது. இதுவே ஜப்பானுக்கும் அமெரிக்காவை இலக்காக வைக்க முக்கியக் காரணமாக அமைந்தது. அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா ஒரு வல்லரசு நாடு.

 

முதல் வெற்றி

முதல் வெற்றி

புல்லட் ரயிலில் முடிசூடா மன்னனாக இருக்கும் ஜப்பான், தனது அண்டை நாடான தைவான் நாட்டிற்கு ‘Shinkansen' என்ற அதிநவீன மற்றும் அதிவேக புல்லட் ரயிலை விற்பனை செய்து, தனது புல்லட் ரயில் வர்த்தகத் திட்டத்தின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

 அடுத்தத் தோல்வி

அடுத்தத் தோல்வி

இந்நிலையில் புல்லட் ரயில் அமைக்க இந்தோனேசியா திட்டமிட்டது. 2015ஆம் ஆண்டு இந்நாட்டில் புல்லட் ரயில் அமைக்கப் பல நாடுகள் போட்ட்போட்ட நிலையில், ஜப்பான் நாட்டை வென்றிட சீனா, 5.5 பில்லியன் டாலர் என்ற தொகையைக் குறிப்பிட்டுத் திட்டத்தை வென்றது .

சிங்கப்பூர்-கோலாலம்பூர்

சிங்கப்பூர்-கோலாலம்பூர்

இதேபோன்ற போட்டி சிங்கப்பூர்-கோலாலம்பூர் நாடுகள் மத்தியில் நிறுவப்படும் புல்லட் ரயில் திட்டத்தில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு மத்தியில் போட்டி கடுமையாக இருந்து. ஆனால் இத்திட்டத்தில் இரு நாடுகளுக்குமே தோல்வியடைந்தது.

காரணம் இத்திட்டத்தைச் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளின் அரசு நிறுவனங்களே நிறுவ முடிவு செய்யது.

 

கடைசியில் இந்தியா..

கடைசியில் இந்தியா..

இப்படித் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஜப்பான், மோடி தலைமையிலான அரசின் இன்ஃபராஸ்டக்சர் திட்டங்களின் அறிவிப்புகள் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது.

 சீனா - ஜப்பான்

சீனா - ஜப்பான்

இந்தியா முதல் புல்லட் ரயில் திட்டத்தைப் பெறச் சீனா, ஜப்பான் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நிறுவனங்களும் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டியது.

ஆனால் இந்தியா ஜப்பான் நாட்டின் சேவையைத் தேர்வு செய்தது. காரணம் இதுவரை ஜப்பான் நாட்டின் புல்லட் ரயில்கள் எவ்விதமான பெரிய விபத்துகளையும், பிரச்சனைகளைச் சந்தித்தது இல்லை. ஆனால் சீனா பல விபத்துக்களைச் சந்தித்தது. மேலும் ஐரோப்பிய நிறுவனத்தின் திட்டம் மிகவும் காஸ்ட்லியாக இருந்தது.

இதன் காரணமாக இந்தியா ஜப்பான் நாட்டின் திட்டத்தைத் தேர்வு செய்தது.

 

நிதியுதவி

நிதியுதவி

இந்தப் புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி ரூபாய், இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதற்காக நிதி திரட்டுவதற்கான வழிகள், திட்டத்தை ஒத்துவைக்கலாம் என இந்திய அரசு யோசித்து வந்தது.

ஜப்பான் தலையீடு..

ஜப்பான் தலையீடு..

ஏற்கனவே மோடியின் ஜப்பான் பயணத்தில் இந்திய உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு ஜப்பான் அரசு உதவி செய்ய வாக்குறுதி அளித்திருந்தது. இதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் ஜப்பான், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

கிடைத்த வாய்ப்பு...

கிடைத்த வாய்ப்பு...

தைவான் நாட்டுத் திட்டத்திற்குப் பின் பல தோல்வியைச் சந்தித்த ஜப்பான் இந்தியாவின் திட்டத்தைக் கைவிட மனமில்லை அதன் காரணமாக, தனது வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகளுக்கும் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தவும் மொத்த திட்ட தொகையில் 65 சதவீத நிதியுதவியை அளிக்க ஒப்புதல் அளித்தது.

அனைத்திற்கும் அடிப்படையாக வர்த்தகத்தை விடக்கூடாது என்பதும், இத்திட்டத்தை நிறுவிய பின் தொடர்ந்து சேவையில் ஜப்பான் நிறுவனமே இருக்கும் வகையில் திட்டமிட்டு நிதியுதவி செய்ய ஒப்புதல் அளித்து ஜப்பான்.

 

 வட்டி

வட்டி

ஜப்பான் அளிக்கும் 88,000 கோடி ரூபாய் கடனை, இந்தியா அடுத்த 50 வருடத்திற்கும் திருப்பி அளிக்க வேண்டும். இந்தக் கால அளவு இரு நாடுகளின் ஒப்புதல்களுடன் நீட்டிப்புச் செய்ய முடியும்.

மேலும் இந்த 88,000 கோடி ரூபாயை வெறும் 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கிறது ஜப்பான். இது இரு நாடுகள் மத்தியிலான வவிமையான நட்புறவுக்கு முக்கியச் சான்றாக உள்ளது.

 

வேகம்

வேகம்

அகமதாபாத்-மும்பை ஆகிய இரு நகரங்கள் மத்தியில் அமையப்போகும் நாட்டின் முதல் புல்லட் ரயில் 508 கி.மீ., தூரத்துக்கு இயக்கப்பட உள்ளது.

இந்தப் புல்லட் ரயில் முதற்கட்டமாக மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும், பின்னாளில் இதன் வேகம் 350 கி.மீ. வரை அதிகரிக்கப்படும். இந்த ரயில் சபர்மதி, வதோதரா உட்பட 12 ரயில்வே நிலையங்களில் நின்றுசெல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

<strong>ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடுத்தச் செக்.. மக்களுக்கு லாபம் அதிகம்..!</strong>ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அடுத்தச் செக்.. மக்களுக்கு லாபம் அதிகம்..!

..." data-gal-src="http:///img/600x100/2017/09/bsnlandaadhaar-14-1505379490.jpg">
எப்படி..?

எப்படி..?

<strong>பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி..? </strong>பிஎஸ்என்எல் மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி..?

இந்திய விஞ்ஞானி

இந்திய விஞ்ஞானி

<strong>பல லட்சம் சம்பளத்தை விட்டுதள்ளி ஆடு மேய்க்க வந்த இந்திய விஞ்ஞானி..!</strong>பல லட்சம் சம்பளத்தை விட்டுதள்ளி ஆடு மேய்க்க வந்த இந்திய விஞ்ஞானி..!


 

ஆற்று மணல்

ஆற்று மணல்

<strong>ஆற்று மணலை இறக்குமதி செய்யும் அரபு நாடுகள்.. எங்கு போய் முடியபோகிறதோ..?! </strong>ஆற்று மணலை இறக்குமதி செய்யும் அரபு நாடுகள்.. எங்கு போய் முடியபோகிறதோ..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan financing 88,000 crore for India's First bullet train

Japan financing 88,000 crore for India's First bullet train | இந்தியாவில், ஜப்பான் புல்லட் ரயில் அமைப்பதின் உண்மையான பின்னணி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X