தவறான நேரத்தில் வந்த டிஜிட்டல் இந்தியா.. விளைவு 'விஐபி'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் புரட்சி, இந்தியாவில் தவறான நேரத்தில் ஊக்குவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவு நாடு முழுவதும் வேலையில்லா பட்டதாரிகள் (விஐபி) எண்ணிக்கை புதிய உயர்வை அடைந்துள்ளது.

 

இந்தியாவில் டிஜிட்டல் சேவையின் பயன்படுத்தும் அளவீடு கடந்த சில வருடங்களாகவே தனியார் நிறுவனங்களில் அதிகரித்து வந்த நிலையில், மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா என்ற மிகப்பெரிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

இதனால் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன..? இதனால் சமானியர்களின் வாழ்வியல் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

கடந்த ஒரு வருடத்தில் அதிகளவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தியதும், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான டிஜிட்டல் சேவையை வழங்கியதிலும் இந்திய வங்கித்துறை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் யெஸ் வங்கி சுமார் 12 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது, இதில் பெரும் பகுதியினர் விற்பனை பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வங்கித்துறைக்குள் நுழைந்தால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரேயொரு வங்கி கிளையுடன் வர்த்தகம் செய்ய முடியும்.

இப்போது மொபைல் போன்களை விற்பனை செய்வது போல் வங்கி திட்டங்களை மக்கள் மத்தியில் விற்பனை செய்யக் கூடுதலான ஆட்களை நியமிக்க வேண்டும் அவ்வளவு தான், காலப்போக்கில் ஆட்களைக் குறைத்து சேவைகளை மேம்படுத்தினால் போதுமானது.

இதுவே இன்றைய நிலை.

 

பிரச்சனை
 

பிரச்சனை

அப்படியென்றால் டிஜிட்டல் சேவைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளது தவறா என்று நீங்கள் கேட்டால்.. அதற்குப் பதில் இல்லை.

இப்போது இருக்கும் பிரச்சனையை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி பழைய வேலைவாய்ப்புகளை முழுவதுமாக நீக்கியுள்ளது, மற்றொன்று போதுமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.

இது இரண்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு தடைகல் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

 

சுருக்கமாக..

சுருக்கமாக..

உதாரணமாக வங்கித்துறையை எடுத்துக்கொள்வோம். வங்கித்துறையில் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் சேவை தரம் உயர்ந்தாலும், 500 பேர் செய்ய வேண்டிய வேலையை வெறும் 50 ஊழியர்களைக் கொண்டு முடிக்க முடியும் வாய்ப்புகள் உள்ளது.

இதனால் 450 பேருக்கு வேலைவாய்ப்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

பிற துறைகளில்..

பிற துறைகளில்..

இந்தப் பிரச்சனை வங்கித்துறையில் மட்டும் அல்லாமல் ஐடி, ஆட்டோமொபைல், உற்பத்தி, சேவைத் துறை எனப் பல இடங்களில் வந்துள்ளது.

இன்று ஐடி நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைக்கு ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் சேவைகள் முக்கியக் காரணமாகும். ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தற்போது பிற துறை நிறுவனங்களுக்கு அளிக்கும் டிஜிட்டல் சேவையின் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தையும் லாபத்தையும் அடைந்து வருகிறது.

 

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

இந்திய உற்பத்தித் துறையில், 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் 30-40 சதவீதம் அளவிலான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது என டீம்லீஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல்களை அறிவித்துள்ளது.

எல் அண்ட் டி

எல் அண்ட் டி

அதேபோல் நாட்டின் முன்னணி நிறுவனமான எல் அண்ட் டி என அழைக்கப்படும் லார்சன் மற்றும் டியூப்ரோ நிறுவனம் அடுத்த 2 வருடங்களுக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது.

கூடுதல் பாதிப்புகள்

கூடுதல் பாதிப்புகள்

டிஜிட்டல் ஊக்குவிப்பு திட்டத்தால் ஏற்கனவே வேலைவாய்ப்புச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மிகப்பெரிய வர்த்தக மாற்றத்தை உண்டாக்கும் நடவடிக்கையைக் கொண்டு வந்தது.

இதனால் மொத்த சப்ளை செயின் வர்த்தகமும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வகைப்படுத்தாத துறையிலும் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் குறைந்தது.

 

நாணய மதிப்பு

நாணய மதிப்பு

வேலைவாய்ப்பு சந்தை மற்றும் வர்த்தகம் தொடர்ந்து பாதிப்பு அடைந்ததால் நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாமல் ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது.

7.7 பில்லியன் டாலர்

7.7 பில்லியன் டாலர்

இந்தப் பாதிப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஏற்க மறுத்து வந்த மத்திய அரசுகள், நாட்டின் வளர்ச்சி கணிப்புகள் வெளியான பின் இந்த வருடம் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்கக் கூடுதலாக 7.7 பில்லியன் டாலர் அதாவது 50,000 கோடி ரூபாயைச் செலவிட முடிவு செய்ததுள்ளது.

முதலீடு

முதலீடு

நாட்டின் முதலீடு தற்போது இருக்கும் இந்திய பொருளாதாரச் சூழ்நிலையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சந்தையில் முதலீடு செய்து வருவதைக் குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரம் ஆக்டோபர் மாதத்தில் 12 சதவீதம் குறைவான பணப் பரிமாற்றத்துடனும், வங்கி வைப்பில் கூடுதலாக 8 சதவீத பணத்துடனும் இயங்கி வருகிறது.

 

புதிய உச்சத்தைத் தொட்ட..." data-gal-src="http:///img/600x100/2017/09/jobs4-21-1505991471.jpg">
வேலையில்லா திண்டாட்டம்..!

வேலையில்லா திண்டாட்டம்..!

<strong>புதிய உச்சத்தைத் தொட்ட வேலையில்லா திண்டாட்டம்..!</strong>புதிய உச்சத்தைத் தொட்ட வேலையில்லா திண்டாட்டம்..!

 ஐடி துறை

ஐடி துறை

<strong>அடுத்த 30 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி..!<br /></strong>அடுத்த 30 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s digital push timing is all wrong

India’s digital push timing is all wrong
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X