மும்பை: மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்த புதுப்புது திட்டங்கள் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பது மட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தகச் சந்தையும் அதிகளவில் பாதித்து இந்திய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில் மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த 50,000 கோடி ரூபாய் வரை கூடுதலாகச் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான முதலே மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்திலும் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள்
இந்திய சந்தையில் நிலவும் மோசமான சூழ்நிலையில் மற்றும் அமெரிக்கா வட கொரியா மத்தியில் நிலவும் பதற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதனாலேயே கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் மந்தமான வர்த்தக சூழ்நிலை நிலவியது.
லாப நோக்கில் விற்பனை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை கருத்தில் கொண்டு இந்திய சந்தையில் செய்திருந்த முதலீட்டை லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை இன்றைய வர்த்தகத்தில் விற்பனை செய்து வெளியேறினர்.
வளர்ச்சி கணிப்புகள்
பொருளாதார வளர்ச்சியில் சீனாவிற்கு கடுமையான போட்டியாக இருந்த இந்தியா தற்போது சீனாவை விட குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளதாக OECD அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ்
இதனுடன் வடகொரியாவில் நிலவும் பிரச்சனைகள் திங்கட்கிழமை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
இன்றைய வர்த்தகம் துவங்கும் பொழுதே சரிவுடன் துவங்கிய நிலையில், இன்று 380 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 275.61 புள்ளிகள் சரிந்து 31,646.83 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் அதிகளவிலான சரிவை சந்தித்து, திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 89.10 புள்ளிகள் சரிந்து 9,875.30 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications