இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்க தற்போது 21ஆக உள்ளது, இதனை வங்கிகள் இணைப்பு மூலம் 10-15 வங்கிகளாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசிடம் இருக்கும் வங்கிகளின் பங்கு இருப்பு அளவை 52 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது என நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான சஞ்சீவ் சன்யால், டெல்லியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசு வங்கிகளின் பங்கு இருப்பை குறைத்த திட்டமிட்டது, இதற்கு வங்கி ஊழியர்கள் அதிகளவிலான எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த முடிவில் இருந்து தற்காலிகமாக கைவிட்ட நிலையில் சஞ்சீவ் கூறியதை வைத்து பார்க்கும் போது அரசு தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தெரிகிறது.
அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கும் முறையில் அடுத்த சில நாட்களில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் கூடுதலான நிதியை முதலீடு செய்துள்ளது.