விவசாய கடன் வாங்கிவிட்டு சிக்கி தவிக்கும் விவசாயிகள்.. தமிழகம் முதலிடம்..!

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எல்லாம் என்றோ பழையது ஆகிவிட்டது, இன்று வாசயத்திற்கு மதிப்பு என்தே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

ஒரு பக்கம் படித்து, ஐடி மற்றும் பிற துறைகளில் வேலை பார்க்க பிடிக்காமல் இளைஞர்கள் விவசாயம் பக்கம் வந்தாலும் அவர்களைப் பார்த்துச் சிரிப்பவர்கள் தான் அதிகம்.

வருவாய் குறைவு

வருவாய் குறைவு

ஆனால் நாடு முழுவதும் விவசாயிகள் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர், அதே நேரம் விவசாயத்தில் பெரிதாக வருவாயும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் கடன் வாங்குவது தொடர்கதை ஆகியுள்ளது. அதே நேரம் மத்திய அரசு விவசாயக் கடனுக்கு மானியம் அளிக்க முன் வரவில்லை என்றாலும் மாநில அரசுகள் கடன் அளிக்கின்றனர்.

டாப் இரண்டு மாநிலம்

டாப் இரண்டு மாநிலம்

இந்திய ரிசர்வ் வங்கியுடைய அறிக்கையின் படி 2015-2016 நிதி ஆண்டில் விவசாயக் கடன் வாங்கியவர்களில் உத்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாடும் தான் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த கடன் மதிப்பு

மொத்த கடன் மதிப்பு

வங்கிகள் மொத்தமாக 8.94 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் அளித்துள்ளன. அதிலும் 50 சதவீதத்தைக் கடன் உத்திரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஆந்திரபிர்தேச மக்கள் தான் வாங்கியுள்ளனர்.

கடன் பெற்ற விவசாயிகள்

கடன் பெற்ற விவசாயிகள்

ஆர்பிஐ வங்கியின் அறிக்கையின் படி 40 சதவீத கடனை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்றுள்ளனர். சராசரியாக இந்த விவசாயிகள் 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர்.

தள்ளுபடி

தள்ளுபடி

உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு 1 லட்சம் ரூபாய் வரையிலான சிறு மற்றும் நடத்தர விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்துள்ளார். அதே நேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனுக்குத் தள்ளுபடியினை அறிவித்துள்ளார்.

குறையாத பிரச்சனை

குறையாத பிரச்சனை

ஆனாலும் விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பிரச்சனை குறையவில்லை. பல விவசாயிகள் கடனை திருப்பி அளிக்க முடியாமல் இறக்கும் செய்திகள் ஒரு பக்கம் வந்துகொண்டு தான் உள்ளது.

கடன் வாங்கியுள்ள முக்கிய மாநிலங்களின் அளவீடு

கடன் வாங்கியுள்ள முக்கிய மாநிலங்களின் அளவீடு

 

மாநிலம்கடன்
தமிழ்நாடு 11.40%
உத்திர பிரதேசம் 11.30%
மகாராஷ்டிரா 9.00%
பஞ்சாப் 8.70%
ஆந்திர பிரதேசம் 8.50%
தள்ளுபடி செய்துள்ள கடன் தொகை

தள்ளுபடி செய்துள்ள கடன் தொகை

 

மாநிலம்கடன்
உத்திரபிரதேசம் 36,000 கோடி
மகாராஷ்டிரா 34,000 கோடி
பஞ்சாப் 10,000 கோடி
கர்நாடகா 8,000 கோடி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+