மத்திய அரசு வங்கி கணக்கில் அல்லது நிதி நிறுவனங்களில் குறிப்பிட்ட வரம்பிற்கு அதிகமாக ரொக்க பணமாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அடையாள ஆவணங்கள் கட்டாயம் எனக் குறியுள்ளது.
ஆனால் ஏற்கனவே வங்கிகளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் கூறி வரும் நிலையில் அடையாள ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது எதற்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசாணை
நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் துறை பணப் போசடி சட்டத்தின் கீழ் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஆவன சரிபார்ப்பு
புதிய விதிகளால் வாடிக்கையாளர்கள் பணத்தினை டெபாசிட் செய்ய வரும் போதும் அவர்களிடம் இருந்து அசல் ஆவணங்களைப் பெற்று நகல் ஆவணத்துடன் சரிபார்த்த பிறகு பணத்தினை டெபாசிட் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எங்கு எல்லாம் இந்த விதிகள் பொருந்தும்?
பண மோசடி சட்டத்தின் கீழ் வங்கிகள் மட்டும் இல்லாமல் சிட் பண்ட்ஸ், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கி சாராத நிறுவனங்கள் என அனைத்துக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரிவர்த்தனை
வங்கி கணக்கில் ரொக்க பணமாக 50,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த வரும்போது பையோமெட்ரிக் ஆதார் எண் மற்றும் பிற அலுவலக ஆவணங்கள் நகல் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கு துவங்கும் போது இந்த ஆவணங்கள் எல்லாம் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து வாங்கும் போது
மேலும் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய வெளிநாட்டு நாணயங்களை மாற்ற வரும் போதும், 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மின்னணு பரிவர்த்தனை செய்யும் போதும், 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அதிகமாகச் சொத்துக்கள் வாங்கும் போது அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அடையாள ஆவணங்கள்
ஒருவேலை அடையாள ஆவணங்களில் புதிய முகவரி இல்லை என்றால் இரண்டு மாதத்திற்கு உட்பட்ட மின்சாரக் கட்டணம், மொபைல் கட்டணம், கேஸ் கட்டணம், மற்றும் நீர் கட்டண ரசீதுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.