நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு 28 சதவீத வரிப் பட்டியலில் இருக்கும் 227 பொருட்களின் வர்த்தகம் அதிகளவில் குறைந்தது.
இதனால் ஜூலை மாதம் முதல் அரசுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் மூலம் இன்று நடந்த முக்கிய 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
28 சதவீத வரி
இனி 28 சதவீத வரிப் பட்டியலில் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய Sin tax பொந்தக்கூடிய பொருட்கள் மட்டுமே இருக்கும். இதுவரை இப்பிரிவில் இருந்த பிற பொருட்கள் அனைத்தும் 18 சதவீத வரியின் கீழ் மாற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை முக்கியக் காரணியாகக் கொண்டு இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது.
227 பொருட்கள்
தற்போது ஜிஎஸ்டியின் 28 சதவீத வரியின் கீழ் சுமார் 227 பொருட்கள் உள்ளது இதில் 175 பொருட்கள் 18 சதவீதத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் பீகார் மாநிலத்தின் நிதியமைச்சரான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
முக்கியப் பொருட்கள்
இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் சாக்லெட், சுவிங்கம், ஆப்டர் ஷேவ், அழகு பொருட்கள், பவுடர், டிட்டர்ஜென்ட் மற்றும் மார்பல் ஆகியவை தற்போது 18 சதவீதத்தின் கீழ் தள்ளப்படும்.
52 பொருட்கள் மட்டுமே
இந்நிலையில் இப்புதிய மாற்றத்திற்குப் பின் 28 சதவீத வரி பட்டியலின் கீழ் வெறும் 52 பொருட்கள் மட்டுமே இருக்கும்.
இதில் சிகரெட், ஏர் கன்டிஷன், வாஷிங் மெஷின், பெயின்ட் மற்றும் சிமென்ட் ஆகிய பொருட்கள் அடங்கும்.