இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வாலும், பொட்ரோல் மற்றும் டீசல் விலையில் மத்திய அரசின் செய்த தொடர் மாற்றங்களின் மூலம் அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.59 சதவீதத்தை அடைந்து சுமார் 6 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 2.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த விலை பணவீக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் செப்டம்பர் மாத்தில் 1.99 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் ஆக்டோபர் மாதத்தில் இது 3.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில் காய்கறிகளின் மீதான பணவீக்கம் 19.9 சதவீதமாக உயர்ந்து மக்களை அதிகளவில் பாதித்துள்ளது.
முக்கியமான பொருட்கள் மொத்த விலை பணவீக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவீட்டைக் கொண்டு இருக்கும் நிலையில் இதன் பணவீக்கம் 3.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் இதன் அளவு 0.15 சதவீமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 0.26 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.