பீகார் மாநில துணை முதல்வரான சுஷில் மோடி வெள்ளிக்கிழமை சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் உள்ள 12 மற்றும் 18 சதவீதம் வரி விகிதங்கள் ஒன்றிணைக்கப்பட்டுப் புதிய வரி விகிதம் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
சுஷில் மோடி அவர்களும் ஜிஎஸ்டி குழிவின் ஒரு முக்கிய உறுப்பினர் ஆவார், மேலும் பேக் செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் விலை டே குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய வரி விகிதம் எவ்வளவு?
ஜிஎஸ்டி கவுன்சிலானது 12 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தினை ஒன்றிணைத்து அதற்கு இடையில் ஒரு வரி விகிதத்தினை அளிக்க இருப்பதாகக் கூறுகிறது. மேலும் 28 சதவீதம் வரி விகிதத்தின் கீழ் உள்ள 50க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எப்போது மாற்றப்படும்?
இந்த வரி விகித மாற்றங்கள் எல்லாம் வரி வருவாய் நிலையானதற்குப் பிறகு செய்யப்படும் என்று பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது சுஷில் மோடி இதனைத் தெரிவித்தார்.
சிக்கல்கள் குறைந்தன
ஜிஎஸ்டி கவுன்சில் 178 பொருட்கள் மீதான அதிக வரி விகிதத்தினைக் குறைத்த பிறகு 90 சதவீத வரி விகித சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுஷில் மோடியின் ஆலோசனை
ஜிஎஸ்ட் கவுன்சிலுக்குத் தான் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீது இருக்கும் விலை ஸ்டிக்கரில் வரி உட்பட அனைத்தும் உள்ளடக்கப்பட்ட விலையாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும் இதனை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கும் என்பதை நம்புவதாகவும் தெரிவித்தார்.