குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மாற்றி வருகிறது.
இந்நிலையில் இன்று வர்த்தகம் முடிவதற்குள்ள சென்செக்ஸ் குறியீட்டின் உச்ச அளவான 33,866 புள்ளிகளைத் தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத்
2.30 மணியவரையில் குஜராத் மாநிலத்தில் பிஜேபி 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, இதேபோல் காங்கிரஸ் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 2012ஆம் ஆண்டில் காங்கிரஸ் 61 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள்
தற்போதைய சூழ்நிலை மும்பை பங்குச்சந்தைக்குச் சாதகமாக இருக்கும் நிலையில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதிய உச்சம்
மேலும் ஐரோப்பிய சந்தை தற்போது துவங்கியுள்ளதால் கூடுதலான முதலீடும் எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் இன்று சென்செக்ஸ் தனது 33,.866 புள்ளிகள் என்ற உச்ச நிலையைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ்
2.36 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 245.55 புள்ளிகள் உயர்ந்து 33,708.52 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் தனது புதிய உச்ச அளவான 33,865.95 புள்ளியை நவம்பர் 7ஆம் தேதி அடைந்தது குறிப்பிடத்தக்கது.