வங்கிக் கடனை கட்ட தவறியவர்களின் இரண்டாம் பாட்டியலை வெளியிட்ட ஆர்பிஐ 2017 டிசம்பர் மாத இறுதிக்குள் வசூலிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் தற்போது வங்கிகள் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் வேண்டும் என்று விதித்த கோரிக்கையினையும் ஆர்பிஐ நிராகரித்துள்ளது.
இரண்டாம் பட்டியல்
ஆர்பிஐ வெளியிட்ட இரண்டாவது பட்டியலில் விடியோோகான் இண்டஸ்ட்ரீஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், உத்தமால்வா ஸ்டீல், எஸ்ஸார் ப்ராஜெக்ட்ஸ், ஜெய்ஸ்வால் நேகோ மற்றும் ஏசியன் கலர் கோடட் போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ஆரிபிஐ காலக்கெடுவை நீட்டிக்காது இந்த நிறுவனங்களுக்குப் பெறும் சிக்கல் ஆகியுள்ளது.
நிராகரிப்பு
திவால் நீதிமன்றத்திற்கு வெளியே மறுசீரமைப்புத் தொடர்பான செயல்முறை உட்பட எதுவாக இருந்தாலும் மத்திய வங்கியானது எந்தக் காரணத்தினைக் கொண்டும் காலக்கெடு நீட்டிப்பை வழங்கப்போவதில்லை என்று புதன் கிழமை தெரிவித்துள்ளது.
தகவல்
ஆர்பிஐ வங்கி ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட விதிகளின் கீழ் செயல்படாத வங்கி கணக்குகள் செயல்படாது என்று பெயரிட விரும்பாத இரண்டு மூத்த வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
முதல் பட்டியல்
மத்திய வங்கி வரா கடன் வைத்துள்ளவர்களின் முதல் பட்டியலினை ஜூன மாதம் வெளியிட்டுச் சம்மந்தப்பட்ட நிறுவனங்களை உடனடியாகத் திவால் நீதிமன்றத்தின் கீழ் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்தப் பட்டியலில் எஸார் ஸ்டீல், பூஷண் ஸ்டீல், லங்கா, ஏபிஜி ஷிப்டைர்ட், பூஷன் பவர் மற்றும் அலோக் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிடோர் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இரண்டாம் பட்டியலை வெளியிட்ட போது டிசம்பர் மாதம் வரை வங்கிகளுக்குக் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
அடுத்தகட்ட நடவடிக்கை
வங்கிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் வாங்கிவிட்டுச் செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யுமா வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொருத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications