இந்திய வங்கித்துறையில் வராக்கடன் சொத்துக்கள் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், வங்கி தரப்பும் அதன் அளவைக் குறைக்கவும், கூடுதல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது ஐபிசி மசோதா.
இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பாங்க் ஆப் பரோடா, மற்றும் யூன்யன் பாங்க் ஆப்ப் இந்தியா ஆகியவை வராக் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட இரு முக்கிய நிறுவனங்களின் சொத்துக்களைப் பொதுச் சந்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
2 நிறுவனங்கள்
புஷன் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் சுமார் 17,550 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பொதுச் சந்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் தற்போது இந்தச் சொத்துக்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.
திவால்
தற்போது இரு நிறுவனங்களும் நொடித்து மற்றும் திவால் பிரச்சனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், திவாலாக அறிவிக்கும் பணிகள் மார்ச் 31 வரையில் கால அவகாசம் வங்கிகளுக்குக் கிடைத்துள்ளது.
கடன் அளவுகள்
புஷன் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களுக்குப் பாங்க் ஆப் பரோடா 13,566 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ள நிலையில் சுமார் 42 கணக்குகளில் இருந்து இரு நிறுவனங்களின் சொத்துக்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
அதேபோல் யூனியன் வங்கி சுமார் 3,985 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ளது, இதற்கு 18 கணக்குகளில் இருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மட்டும்
இந்தச் சொத்துக்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் பணமாக மட்டுமே கொடுக்க வேண்டும் எனப் பாங்க் ஆப் பரோடா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் யூனியன் வங்கி பணம் மற்றும் பாதுகாப்பு வைப்பு நிதியாகப் பெற தயாராக உள்ளது என அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications