உண்மையாகவே ஆதார் விவரம், பணம் எல்லாம் திருடப்படுகிறதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் கார்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் இருந்தாலும் மத்திய அரசு வங்கி கணக்கு, மொபைல் எண், அரசு பொது நலத் திட்டங்கள் வருமான வரி தாக்கல் எனப் பலவற்றுக்கு ஆதார் இணைப்புக் கட்டாயம் என்று உத்தரவிட்டு வருகிறது.

 

அதே நேரம் பலரது ஆதார் விவரங்கள் அரசு இணையதளங்களில் வெளியாகியும் சார்ச்சிகள் ஆனது. இது ஒரு பக்கம் இருக்கச் சில வாரங்களுக்கு முன் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து லட்சம் கணக்கில் பணம் திருடப்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசே ஒப்புக்கொண்டது. ஆனாலும் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அப்படி ஏதும் நடைபெறவில்லை, ஆதார் விவரங்கள் வாட்ஸ் ஆப்பில் விற்கப்படவில்லை என்றெல்லாம் மருத்து வந்த நிலையில் மக்களுக்கு இது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளது.

இதோ ஆதார் விவரங்கள் திருடப்படுகிறதா உட்பட உங்களது பல கேள்விகளுக்காகப் பதில்களை இங்குப் பார்க்கலாம்.

ஆதார் விவரங்கள் திருடப்பட்டதாக வரும் செய்திகள் உன்மையா?

ஆதார் விவரங்கள் திருடப்பட்டதாக வரும் செய்திகள் உன்மையா?

கடந்த 7 வருடத்தில் இதுவரை ஒரு முறை கூட ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என்று ஆதார் ஆணையாம் தெரிவித்துள்ளது. அனைத்து மக்களின் ஆதார் விவரங்களும் முறையான தொழில்னுட்பங்களுடன் பாதுகாப்பாக உள்ளது.

ஆதார் எண்ணை வைத்து தனிநபர் ஒருவரை டிராக் செய்ய முடியுமா?

ஆதார் எண்ணை வைத்து தனிநபர் ஒருவரை டிராக் செய்ய முடியுமா?

முடியாது. இந்திய தனிநபர் அடையாள ஆணையத்திடம் தனிநபர் ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், பிரந்த தேதி, கைரேகை, கருவிழி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற விவரங்கள் மட்டுமே இருக்கும்.

ஆதார் ஆணையத்திடம் உங்களது குடும்பம், மதம், சாதி, படிப்பு, வங்கி கணக்கு, பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, சொத்து விவரங்கள், உடல் நலம் குறித்த எந்தத் தகவல்களும் இருக்காது.

ஆதார் சட்டம் 2016-ன் பிரிவு 32(3)-ன் கீழ் தனிநபர் விவரங்களைக் கட்டுப்படுத்தல், சேகரித்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

 

 முதலீட்டு விவரங்கள்
 

முதலீட்டு விவரங்கள்

அதார் கார்டில் வங்கி கணக்கு, பங்கு சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்டு மற்றும் மொபைல் எண் போன்றவற்றை இணைத்துள்ளதால் ஆதார் ஆணையத்தால் அந்த விவரங்களைப் பெற முடியுமா?

முடியாது. ஆதார் எண்ணை உங்கள் வங்கி கணக்கில் இணைக்கும் போது மியூச்சிவல் ஃபண்டு, மொபைல் எண் நிறுவனம் போன்றவற்றுக்கு அதார் எண், பெயர் மற்றும் பையோமெட்ரிக் சரிபார்ப்பிற்கான அனுமதிகள் மட்டுமே அளிக்கப்படும்.

அதாவது சரிபார்ப்புச் செயூம் போது ஆம் அல்லது இல்லை என்ற விவரங்கள் மட்டுமே இருக்கும். பிற முக்கிய விவரங்கள் ஏதுவும் அளிக்கப்பட மாட்டாது.

 

 எனது ஆதார் எண் பிறருக்குத் தெரியுமானால் எனது வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

எனது ஆதார் எண் பிறருக்குத் தெரியுமானால் எனது வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

முடியாது. உங்கள் ஏடிஎம் கார்டு எண் தெரிந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாது அல்லாவா. அதேப்போன்று தான் ஆதார் எண்ணை வைத்து உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க முடியாது. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச் சொல் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் பிறருடன் பகிரும் போது தான் பணத்தினை இழக்க நேரிடும்.

 ஏன் அணைத்து வங்கி கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்?

ஏன் அணைத்து வங்கி கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்?

உங்கள் வங்கி கணக்கில் மோசடி சம்பவம், பணம் மோசடி, குற்றவாளிகள் உள்நுழைதல் போன்றவை ஏதும் நடைபெறாத அளவிற்குப் பாதுகாப்பு அளிக்கவே ஆதார் உதவுகிறது. அனைத்து வங்கி கணக்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டால் எளிதாக வங்கி கணக்கில் மோசடிகள் நடைபெற்றால் கண்டறிய முடியும்.

 ஏன் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

ஏன் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?

நாட்டின் பாதுகப்பிற்காகத் தேசவிரோத சக்திகள் யாரும் முறைகேடாக மொபைல் எண்ணை இந்தியாவில் வாங்கிப் பயன்படுத்துக் கூடாது போன்ற காரணங்களுக்காக ஆதார் இணைப்புக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மொபைல் நிறுவனங்களால் எனது பையோமெட்ரிக் விவரங்களைச் சேமித்து வைக்க முடியுமா?

மொபைல் நிறுவனங்களால் எனது பையோமெட்ரிக் விவரங்களைச் சேமித்து வைக்க முடியுமா?

மொபைல் நிறுவனங்கள், வங்கிகள் என ஆதார் சரிபார்ப்புச் சேவையினைப் பயன்படுத்தும் யாராலும் ஆதார் கார்டில் உள்ள பையோமெட்ரிக் விவரங்களைச் சேமித்து மீண்டும் பயன்படுத்த முடியாது. ஒருவர் தங்களது கைரேகையினை இயந்திரத்தில் வைத்து உடன் அது வேகமாக என்கிரிப்ட் செய்யப்படும். ஆதார் சட்டம் 2016-ன் கீழ் நிறுவனங்கள் இப்படி மோசடி செய்தால் அது தண்டனைக்கு உரியக் குற்றமாகும்.

வங்கிக்கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியமா?

வங்கிக்கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியமா?

01.01.2017 அன்று மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்த அரசிதழ் அறிவிக்கைப்படி தனிநபர்கள் தங்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் இணைக்க வசதியாக தங்களின் ஆதார் எண்ணை 31.12.2017 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

இதுவரை ஆதார் பெறாத வசிப்பாளர்கள் ஆதார் பெறுவதற்காக தங்களை பதிவு செய்து கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

 

என்ஆர்ஐ

என்ஆர்ஐ

வெளிநாடுவாழ் இந்தியராகவோ, வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகனாகவோ இருக்கும் வசிப்பாளர் ஒருவர் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருந்து அவருக்கு ஆதார் இல்லை என்றால் அவரின் வங்கிக்கணக்கு என்னவாகும்?

வெளிநாடுவாழ் இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களின் வெளிநாடுவாழ் நிலையை ஆதாரங்களுடன் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு செயல்படாத நிலைக்கு போனால், அதை எப்படி சரி செய்வது என்பதை சம்பந்தப்பட்ட வங்கி தான் தெரிவிக்க வேண்டும்.

 

பணம் பரிமாற்றம்

பணம் பரிமாற்றம்

வங்கியில் ரூ.50,000 அல்லது அதற்கு கூடுதலான தொகையை பரிமாற்றம் செய்யும்போது ஆதாரை தாக்கல் செய்ய வேண்டுமா?

01.06.2017 ஆம் தேதியிட்ட மத்திய நிதியமைச்சகத்தின் அரசிதழ் அறிவிக்கையின்படி ரூ.50000 அல்லது அதற்கும் அதிகமான அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆதார் கேட்கப்படும்.

 

அடையாள ஆவணம்

அடையாள ஆவணம்

அரசால் வழங்கப்பட்டுள்ள மற்ற அடையாள ஆவணங்களில் இருந்து ஆதார் எவ்வாறு வேறுபட்டது?

ஆதார் என்பது வசிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் முழுமைக்கும் செல்லுபடியாகக்கூடிய, எந்த நேரமும், எந்த இடத்திலிருந்தும் ஆன்லைனில் சரிபார்க்கக் கூடிய காகிதமற்ற அடையாள ஆவணமாகும். ஆதார் வைத்திருப்பவரின் அடையாளத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மத்திய தகவல் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு கருவிகளின் உதவியுடன் ஆன்லைனில் சரிபார்க்க முடியும். ஒருவர் அவரால் கோரப்படும் அடையாளத்திற்கு சொந்தக்காரரா? என்று வினா எழுப்பப்பட்டால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஆம், இல்லை என்று மட்டுமே பதில் கிடைக்கும்.
ஆதார் சரிபார்ப்பு சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்ட ஒன்றாகும்.நாடு முழுவதும் பல்வேறு சேவை வழங்கும் திட்டங்களில் இது பயன்பாட்டில் உள்ளது. வசிப்பாளர்கள் தங்களின் ஆதாரை அறிந்து கொள்வதற்காக ஆதார் அட்டை அல்லது இ-ஆதார் எனப்படும் ஆதார் நகல் வழங்கப்படுகிறது. எனினும் இவை அனைத்துமே முந்தைய பத்தியில் விளக்கப்பட்டிருப்பது போன்ற ஆன்லைன் அடையாளமாக ஆதாரை பயன்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் தான்.

 

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யவோ, நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கவோ ஆதாருக்கு பதிவு செய்ய வேண்டியது கட்டாயமா? ஆம் எனில் வெளிநாடுவாழ் இந்தியருக்கான நடைமுறைகள் என்ன?

2017-ஆம் ஆண்டு நிதிச்சட்ட்த்தின்படி 1961ஆம் ஆண்டின் வருமானவரிச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 139 ஏஏ பிரிவின்படி 01.07.2017 முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தாலும், நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பித்தாலும் அதில் ஆதார் எண் அல்லது அதற்கான பதிவு செய்த அடையாள எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் இவை அனைத்தும் ஆதார் பெற தகுதியுள்ளோருக்கு மட்டுமே பொருந்தும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி இந்திய வசிப்பாளர்கள் மட்டுமே ஆதார் பெற முடியும். இந்த சட்டத்தின்படி இந்திய வசிப்பாளர் எனப்படுபவர், ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்தவர் ஆவார். அதன்படி ஆதார் 2016 சட்டப்படி இந்திய வசிப்பாளராக இல்லாத ஒருவர் வருமானவரிச் சட்டத்தின் 139 ஏஏ பிரிவுப்படி ஆதார் எண்ணைக் குறிப்பிடத் தேவையில்லை.

 

மொபைல் எண் இணைப்பு

மொபைல் எண் இணைப்பு

செல்பேசி எண்களை ஆன்லையில் பதிவு செய்ய/மாற்ற முடியுமா?

செல்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட எந்த தகவல் திருத்தத்திற்கான விண்ணப்பமாக இருந்தாலும், அதை செய்ய வசதியாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண் வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் தான் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்லை குறுஞ்செய்தி மூலம் பெற முடியும். பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண் இல்லாவிட்டால் அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்துக்குத் தான் செல்ல வேண்டும்.

 

இ-ஆதார்

இ-ஆதார்

சேவை வழங்குவோர் இ-ஆதார் நகலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது?

பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அல்லது இ-ஆதாரிலும் அச்சிடப்பட்ட ஆதார் கடிதத்தில் இருப்பதைப் போலவே சம்பந்தப்பட்ட ஆதார் எண்தாரரின் பெயர், முகவரி, பாலினம்,. புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். 2000ஆவது ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அல்லது இ-ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் மின்னணு முறையில் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட ஆவணமாகும், மின்னணு கையெழுத்து இருப்பதால் மின்னணு ஆவணங்களுக்கான சட்ட அங்கீக்காரத்தை இதற்கு தகவல்தொழில்நுட்பச் சட்டம் வழங்குகிறது.

எனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அல்லது இ-ஆதார் என்பது அச்சிடப்பட்ட ஆதார் கடித்த்திற்கு இணையாக் கருதப்பட வேண்டிய பாதுகாக்கப்பட்ட/ செல்லுபடியாகக் கூடிய ஆவணமாகும்.

 

ஆதாரை திருப்பித் தர என்ன செய்வது?

ஆதாரை திருப்பித் தர என்ன செய்வது?

நான் எனது ஆதாரை திருப்பித் தர விரும்புகிறேன். அதற்காக நான் என்ன, எப்படி செய்ய வேண்டும்?

ஆதாரைத் திருப்பித் தருவதற்கான வசதி இப்போதைக்கு இல்லை. ஆனால், resident.uidai.gov.in என்ற முகவரியில் உள்ள இணையதளத்தை பயன்படுத்தி வசிப்பாளரின் உடற்கூறு விவரங்களை முடக்கி வைத்தல்/விடுவித்தல் மூலம் தங்களில் உயற்கூறு வழி சரிபார்ப்பை நிறுத்தி வைக்க முடியும்.

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் பெற முடியுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் பெற முடியுமா?

2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்த வசிப்பாளர் மட்டுமே ஆதார் பெற முடியும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் கார்டு பெறுவது எப்படி?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் கார்டு பெறுவது எப்படி?

வெளிநாடு வாழ் இந்தியர்/வெளிநாட்டு இந்தியக் குடிமகன் ஆதாருக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான நடைமுறை என்ன? அவர்களுக்கு இந்தியாவில் சொந்த இருப்பிட முகவரி இல்லாவிட்டால் என்ன செய்வது?

2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்த வசிப்பாளர் மட்டுமே ஆதார் பெற முடியும்.

 

பான் - ஆதார் இணைப்பு

பான் - ஆதார் இணைப்பு

நிரந்தர கணக்கு எண்ணிலும், ஆதாரிலும் எனது பெயர் வித்தியாசமாக உள்ளது. இதனால் இரண்டையும் இணைக்க முடியவில்லை. நான் என்ன செய்வது?
நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட டிமோகிராபிக் தகவல்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

ஒருவேளை ஆதார் விவரங்களுடன் ஒப்பிடும்போது வரி செலுத்துபவரால் வழங்கப்பட்ட ஆதார் பெயரில் சிறு மாற்றம் இருந்தால் ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள செல்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி இணைக்கலாம். அதேநேரத்தில் ஆதார், நிரந்தர கணக்கு எண் ஆகிய இரண்டிலும், பாலினம், பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருப்பதை வரி செலுத்துபவர் உறுதி செய்ய வேண்டும்.

மிகவும் அரிதாக நிரந்தர கணக்கு எண்ணில் இருப்பதை விட ஆதாரில் பெயர் முற்றிலுமாக மாறுபட்டிருந்தால் இணைப்பு முயற்சி தோல்வியடைந்து விடும். வரி செலுத்துபவர் ஆதார் அல்லது நிரந்தர கணக்கு எண்ணில் பெயரை மாற்றம் செய்து தான் இணைக்க வேண்டும்.

 

குறிப்பு:

குறிப்பு:

நிரந்தர கணக்கு எண் விவரங்களில் திருத்தம் செய்வது குறித்த விசாரணைகளுக்கு செல்க:: https://www.utiitsl.com.

ஆதார் விவரங்களில் திருத்தம் செய்வது குறித்த விசாரணைகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளம் www.uidai.gov.in-க்கு செல்லவும்

இதற்கு பிறகும் இணைப்பதில் சிக்கல் நீடித்தால் வருமானவரித்துறையின்அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அல்லது அத்துறையின் அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.

 

பான் - ஆதார் விவரங்கள் திருத்தம்?

பான் - ஆதார் விவரங்கள் திருத்தம்?

ஆதார் மற்றும் நிரந்தரக் கணக்கு எண்ணில் எனது பிறந்த தேதி ஒன்றாக இல்லை. அதனால் இரண்டையும் இணைக்க முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள்?

நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட டிமோகிராபிக் தகவல்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் மாறியிருந்தால் அதை நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதாரில் சரி செய்து மீண்டும் இணைக்க முயலவும்.

அதற்கு பிறகும் சிக்கல் நீடித்தால் incometaxindia.gov.in or https://www.utiitsl.comஎன்ற முகவரியில் வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

 நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் அது முடக்கப்பட்டு விடுமா?

நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் அது முடக்கப்பட்டு விடுமா?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரை வழங்குகிறது. அதை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. இவை தவிர வேறு தயாரிப்பு அல்லது திட்டம் குறித்த விசாரணைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களை அணுகவும்.
நிரந்தர கணக்கு எண் தொடர்பான விசாரணைகளுக்கு incometaxindia.gov.in or https://www.utiitsl.comஎன்ற முகவரியில் வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வருமான வரி தாக்கலில் சிக்கல்

வருமான வரி தாக்கலில் சிக்கல்

ஒரு வசிப்பாளர் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய முயல்கிறார். ஆனால், ஆதார் விவரங்கள் பொருந்தவில்லை என்று பதில் வருகிறது. என்ன செய்வது?
நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் டிமோகிரபி தகவல்கள் பொருந்த வேண்டும். . இவற்றில் ஏதேனும் மாறியிருந்தால் அதை நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதாரில் சரி செய்து மீண்டும் இணைக்க முயலவும்.
அதற்கு பிறகும் சிக்கல் நீடித்தால் incometaxindia.gov.in or https://www.utiitsl.comஎன்ற முகவரியில் வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஆதார் சரிபார்ப்பு முறை

ஆதார் சரிபார்ப்பு முறை

ஒரு வசிப்பாளர் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் டிமோகிரபி தகவல்கள் பொருந்த வேண்டும். . இவற்றில் ஏதேனும் மாறியிருந்தால் அதை நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதாரில் சரி செய்து மீண்டும் இணைக்க முயலவும்.
அதற்கு பிறகும் சிக்கல் நீடித்தால் incometaxindia.gov.in or https://www.utiitsl.comஎன்ற முகவரியில் வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

அதார் சேவை

அதார் சேவை

ஆதார் ஆன்லைன் சேவைகளையோ/ இணையதளத்தையோ இந்தியாவுக்கு வெளியிலிருந்து அணுக முடியவில்லை என்ன செய்வது?

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு, அதாவது . www.uidai.gov.in என்ற முகவரி கொண்ட தளத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அதை எங்கிருந்தும் அணுகமுடியும். எனினும் போன்ற சில இணையம் சார்ந்த அம்சங்கள் பூகோளம் சார்ந்த கொள்கை அடிப்படையிலானவை என்பதால் இந்தியாவுக்கு வெளியில் இவற்றை அணுக முடியாது.

 

ரேஷன் அட்டையில் ஆதாரை சேர்ப்பது எப்படி?

ரேஷன் அட்டையில் ஆதாரை சேர்ப்பது எப்படி?

ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலை உங்கள் நியாயவிலைக்கடையில் தாக்கல் செய்யும்படி பரிந்துரைக்கிறோம், நீங்களும், உங்கள் ஆதார் விவரங்களும் பொருந்துகிறதா? என்பதை உறுதி செய்ய உங்கள் விரல்களை சென்சாரில் காட்டும்படி சொல்வார்கள்.

பெயர் சிக்கல்

பெயர் சிக்கல்

ஆதாரிலும், சேவை வழங்கும் அமைப்பின் தகவல் தொகுப்பிலும் எனது பெயர் வேறாக இருந்தால் என்ன செய்வது?

அந்த இரண்டில் எந்த ஆவணத்தை திருத்தம் செய்ய வேண்டுமோ, அதைத் திருத்த வேண்டும். ஒருவேளை ஆதாரில் பெயர்மாற்றம் செய்ய வேண்டுமெனில் அருகிலுள்ள நிரந்தர பதிவு மையத்துக்கு செல்ல வேண்டும். இணையதளத்தில் நிரந்தர பதிவுமைய பட்டியல் உள்ளது. அங்கு பெயர், வயது, முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை மாற்றலாம். அல்லது https://ssup.uidai.gov.in/web/guest/updateஎன்ற இணையதளத்துக்கு சென்று நீங்களாகவே இந்த விவரங்களை மாற்றிக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் உள்ள முகவரிக்கு ஆதாரங்களுடன் விண்ணப்பம் செய்தால் அவர்களே திருத்தி அனுப்புவர். எந்த வகையான தகவலைத் திருத்தபோகிறோம் என்பதைப் பொறுத்து அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

 

கைரேகை

கைரேகை

கைரேகை பதிவு கருவி மீது விரல்களை வைக்கும்படி கூறியபோது எனது விரல்கள் செயல்படவில்லை. நான் என்ன செய்வது?
நீங்கள் அருகில் உள்ள நிரந்தர பதிவு மையத்துக்குக் சென்று உங்கள் உடற்கூறு பதிவுகளை மேம்படுத்துங்கள்(நிரந்தர பதிவுமையங்கள் பட்டியல் www.uidai.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது). அடையாளம், முகவரி ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் கொண்டு செல்லுங்கள். அதுமட்டுமின்றி, உங்கள் செல்பேசி எண்ணை மையத்தில் தரும்படி பரிந்துரைக்கிறோம். உங்கள் ஆவணங்கள் திருத்தப்பட்டவுடன் அதுகுறித்த தகவல்களை உங்களுக்கு வழங்க அது உதவும்.

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள்

எனக்கு பல வங்கிக்கணக்குகள் உள்ளன. நேரடியாக மாற்றப்படும் மானியத்தை எந்தக் கணக்கில் பெறுவது?

உங்கள் ஆதார் கடிதத்தின் நகலை அதன் மீது வங்கிக் கணக்கு எண்ணை எழுதியோ அல்லது வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலை இணைத்தோ வங்கியில் கொடுக்க வேண்டும். ஒரு படிவத்தை நிரப்பித் தரும்படி வங்கியில் கூறுவார்கள். வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் செல்பேசி எண்ணை சரிபார்ப்பதும் நல்லது. உங்கள் கணக்கில் மானியம் நேரடியாக வரவு வைக்கப்பட்டாலோ அல்லது நீங்கள் ஏதேனும் பரிமாற்றம் செய்தாலோ அதுகுறித்த தகவல் குறுஞ்செய்தியாக வரும்.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மட்டும் தான் நேரடி பயன்மாற்ற மானியம் வரவு வைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக பெற ஆதார் தேவையா?

மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக பெற ஆதார் தேவையா?

பெரும்பாலான திட்டங்களை வழங்கும் அமைப்புகள் தங்கள் பயனாளிகள் தொகுப்பிலிருந்து போலிகளையும், இரட்டைப்பதிவுகளையும் நீக்குவதற்காக ஆதார் எண்ணை கோருகின்றன. அவர்களுக்கு உதவும் வகையில் ஆதார் எண்ணை அவர்களிடம் தெரிவிக்கவும். பல்வேறு அரசுத் திட்டங்களின்படி வழங்கப்படும் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் உதவும். ஒருவேளை உங்களிடம் ஆதார் இல்லை என்றால் ஆதார் பதிவு செய்ததற்கான எண்ணை தரலாம் அல்லது ஆதாருக்காக பதிவு செய்துகொள்ளும்படி சேவை வழங்கல் தகவல் தொகுப்பு உரிமையாளரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எந்தத் தடையும் இல்லாமல் பயன்கள், மானியம் மற்றும் சேவைகளை தொடர்ந்து பெற முடியும்.

நேரடி பயன் மாற்ற நிதியை பெறும் வகையில் எனது வங்கிக் கணக்கை எவ்வாறு மாற்றுவது?

நேரடி பயன் மாற்ற நிதியை பெறும் வகையில் எனது வங்கிக் கணக்கை எவ்வாறு மாற்றுவது?

உங்கள் ஆதார் கடிதத்தின் நகலை அதன் மீது வங்கிக் கணக்கு எண்ணை எழுதியோ அல்லது வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலை இணைத்தோ வங்கியில் கொடுக்க வேண்டும். ஒரு படிவத்தை நிரப்பித் தரும்படி வங்கியில் கூறுவார்கள். வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் செல்பேசி எண்ணை சரிபார்ப்பதும் நல்லது. உங்கள் கணக்கில் மானியம் நேரடியாக வரவு வைக்கப்பட்டாலோ அல்லது நீங்கள் ஏதேனும் பரிமாற்றம் செய்தாலோ அதுகுறித்த தகவல் குறுஞ்செய்தியாக வரும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மட்டும் தான் நேரடி பயன்மாற்ற மானியம் வரவு வைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சரிபார்ப்பு

சரிபார்ப்பு

நேரடி பயன்மாற்றத்தின்படியான தொகை எனது வங்கிக்கணக்குக்கு வந்து விட்டதா? என்பதை நான் எப்படி அறிய முடியும்?

உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களுடன் உங்கள் செல்பேசி எண்ணையும் பதிவு செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் கணக்கில் மானியம் நேரடியாக வரவு வைக்கப்பட்டாலோ அல்லது நீங்கள் ஏதேனும் பரிமாற்றம் செய்தாலோ அதுகுறித்த தகவல் குறுஞ்செய்தியாக வரும். இல்லாவிட்டால், ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம்/ வங்கி நண்பன், இணையவங்கி மூலமாகவோ அல்லது வங்கியைத் தொடர்பு கொண்டு உங்கள் பரிமாற்ற விவரங்களைப் பெறுவதன் மூலமாகவே இந்த விவரங்களை நீங்கள் பெற முடியும்.

 

வங்கி நண்பன்

வங்கி நண்பன்

எனது கிராமத்திற்கு வருகை தரும் வங்கி நண்பனைப் பயன்படுத்தி என்னவெல்லாம் நான் செய்யலாம்?
வங்கி நண்பன் கையடக்கக் கருவியைக் கொண்டு வருவார். அதன்மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக்கணக்கில் பலவகையான பரிமாற்றங்களை செய்ய முடியும். கணக்கில் உள்ள பணத்தின் விவரத்தை அறிதல், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், பில் செலுத்துதல், ஆதார் வைத்துள்ள இன்னொருவரின் கணக்கில் பணம் செலுத்துதல் ஆகிய பரிமாற்றங்களை செய்யலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கைத் தொடங்கவும் வங்கி நண்பர் உதவுவார்.

ஆதார் அடிப்படையிலான நேரடி பயன்மாற்றத் திட்டம் பயனாளி என்ற முறையில் எனக்கு எந்த வகையில் உதவும்?

ஆதார் அடிப்படையிலான நேரடி பயன்மாற்றத் திட்டம் பயனாளி என்ற முறையில் எனக்கு எந்த வகையில் உதவும்?

அரசின் திட்டங்களுக்கான தகவல் தொகுப்பில் உங்கள் விவரங்களுடன் ஆதாரை இணைப்பதன் மூலம், உங்களைப் போல நடித்து உங்களுக்குரிய பயன்களை வேறு எவரும் பெறாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதேபோல், பண மாற்றங்களின் போது அது ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும் என்பதால், இதற்காக நீங்கள் பலரை அணுகி விசாரிக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, உங்களுக்குரிய மானியம் உங்களின் எந்த வங்கிக் கணக்கில் வந்து சேர வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும். ஆனால், உங்களுக்குரிய அனைத்து மானியங்களும் ஒரே வங்கிக் கணக்கிற்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக கடைசியாக எந்த கணக்கை ஆதாருடன் இணைத்தீர்களோ, அந்த கணக்கில் தான் அனைத்து பயன்களும் சென்று சேரும்.

அரசுத் திட்டங்கள் எதற்காக ஆதாரை கோருகின்றன?

அரசுத் திட்டங்கள் எதற்காக ஆதாரை கோருகின்றன?

பயனாளிகள் பட்டியலில் இருந்து போலிகளையும், இரட்டைப் பதிவுகளையும் நீக்குவதற்கும், துல்லியமான விவரங்களை வழங்கவும், நேரடி பயன் மாற்றத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஆதார் இணைப்பு உதவுகிறது. ஆதாரைப் பயன்படுத்துவதால் பயனாளிகளை அடையாளம் காணும் செலவு குறைவதுடன், அரசாங்கம் அதன் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கிறது.

 எனது குழந்தைக்கு நீல வண்ண ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அது செல்லுபடியாகுமா?

எனது குழந்தைக்கு நீல வண்ண ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அது செல்லுபடியாகுமா?

ஆம், மற்ற ஆதார் கடிதங்களைப் போலவே நீல வண்ண ஆதார் அட்டையும் செல்லும். புதிய ஆதார் கொள்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீல வண்ணத்திலான குழந்தைகள் ஆதார் வழங்கப்படுகிறது. ஐந்து வயதுக்குப் பிறகு நீலவண்ண ஆதார் அட்டை செல்லாததாகி விடும். அதன்பின் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று குழந்தையின் உடற்கூறுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆதார் செல்லாததாகி விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AADHAAR: Frequently Asked Questions about breach etc.,

AADHAAR: Frequently Asked Questions about breach etc.,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X