மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியா பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை தான் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையாக இருக்கப்போகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
கடைசி முழு ஆண்டுப் பட்ஜெட்
2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் வரும் நிலையில் 2019ஆம் ஆண்டுப் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்க உள்ள பட்ஜெட் அறிக்கை 6 மாதத்திற்கான பட்ஜெட் ஆக இருக்கும்.
ஆக மோடியின் இந்த 5 வருட ஆட்சியில் இதுவே கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையாக இருக்கிறது.
தேர்தல்
2018இல் 8 மாநிலங்கள் 2019இல் பொதுத் தேர்தல் வெற்றிகளைக் கருத்தில் கொண்டே 2018-19ஆம் நிசியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் பட்ஜெட் அறிக்கையில் சாதகமான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்ற கருத்தில் நேற்றைய வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையில், மோடி அரசின் கடைசி முழு ஆண்டுப் பட்ஜெட் என்பதாலும் சந்தை வளர்ச்சிக்குச் சாதகமான வாய்ப்பு இருக்கும் என நம்பிக்கை கிடைத்த காரணத்தால் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிக முதலீடு குவிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
10 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 209.53 புள்ளிகள் உயர்ந்து 36,174.55 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 66.20 புள்ளிகள் உயர்ந்து 11,093.90 புள்ளிகள் அடைந்துள்ளது.