இந்தியாவின் மிகப் பெரிய ஆப் டாக்ஸி நிறுவனமான ஓலா மனிதவள மற்றும் நிர்வாகத் தலைவரான யகுந்தர் சைக்கியா ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதில் கன்சல்டன்சி ஒன்றுடன் சேர்ந்துகொண்டு மோசடி செய்துள்ளதாக விசாரணை வலையில் சிக்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓலா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை இது குறித்துத் தொடர்புகொண்டு விசாரித்த போது நிறுவனத்திற்குள்ளேயே விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் முழு விவரங்களையும் தற்போதைக்குக் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
யகுந்தர் சைக்கியா
2015-ம் ஆண்டு முதல் யகுந்தர் சைக்கியா ஓலா நிறுவனத்தின் மனிதவள துறை அதிகாரியாகப் பதவியேற்ற பிறகு கூடுதலாக மூத்த நிர்வாகத் தலைவர் பதவியையும் சில மாதங்களில் சேர்த்து பார்க்கத் துவங்கியுள்ளார்.
மோசடி
தற்போது ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் கன்சல்டன்ஸி நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு அதிக ஊழியர்கள் பணிக்கு எடுப்பது அவர்களுக்கான பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட பிறகு அவர்களை ரிஜக்ட் செய்வது மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
விசாரணை
ஜனவரி மாதம் முதல் நிறுவனத்தின் விசாரணைக்கு யகுந்தர் சைக்கியா ஒத்துழைப்பும் அளித்து வருகிறார் என்றும் தற்போது ராஜிநாமா செய்துள்ளதாகவும் மார்ச் மாதம் வரை அறிவிப்புக் காலத்தில் உள்ளதாகவும் விசாரணைக்கு வந்தால் மட்டும் போதும் என்றும் எந்த வேலையும் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓலா
ஓலா நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 4 பில்லியன் டாலர்களை விட் ஆதிகமாகும். ஜப்பானின் சாப்ட் வங்கி மற்றும் சீனாவின் டென்சண்ட் கார்ப்ரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓலாவின் முக்கிய முதலீட்டாளர்கள் ஆவார்கள். இந்திய நிறுவனமான இதில் டாக்ஸி மட்டும் இல்லாமல் ஆட்டோ மற்றும் வாலெட் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications