2017-2018 நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 8,044 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோல் இந்தியா பங்குகள் வைத்துள்ள வர்களுக்கு ஒரு பங்குக்கு 16.50 ரூபாய் என டிவிடண்ட் கிடைக்கும்.
2018-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி கோல் இந்தியா நிறுவன போர்டு உறுப்பினர்கள் குழு இடையிலான கூட்டத்தில் 2017-2018 நிதி ஆண்டுக்கான டிவிடண்ட் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனமான இதில் 78.55 சதவீதம் வரையிலான பங்குகள் அரசிடமும் மீதம் பங்கு சந்தையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குக் கூடுதல் டிவிடண்ட் லாபம் 2,085 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் அதிக டிவிடண்ட் அளிப்பது கோல் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.