நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கிட்டத்தட்ட 13,000 கோடி வரையில் மோசடி செய்துள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியானது அவர்கள் பயன்படுத்திய LoUs முறையினைப் பயன்படுத்த வங்கிகளுக்குத் தடை விதித்துச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் LoUs மற்றும் LoCs என்ற இரண்டு சேவையினையும் பயன்படுத்தி வங்கிகள் இனி கடன் வழங்கக் கூடாது என்றும் இந்த நடைமுறையானது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
LoUs மற்றும் LoCs என்றால் என்ன?
வணிகர்கள் இறக்குமதி செய்யும் போது ஆர்பிஐ உதவியுடன் வெளிநாட்டில் உள்ள வங்கி கிளைகளுக்கு உத்தரவாதம் அளித்துக் கடன் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் முறையே LoUs மற்றும் LoCs ஆகும்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கி LoUs முறையினைப் பயன்படுத்தி நீரவ் மோடிக்கு 12,967.86 கோடி ரூபாய் கடன் அளித்து இறக்குமதி செய்ய உதவியுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இரண்டும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரித்து வரும் நிலையில் பல மோசடி வழக்குகள் குறித்த விவரங்கள் தினமும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆர்பிஐ அனைத்து வங்கிகளிலும் மோசடி குறித்து ஆடிட்டிங் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால் பிற வங்கிகளிலும் மோசடி நடைபெற்றுள்ளதோ என்று அச்சம் நிலவி வருகிறது.
ஆர்பிஐ
அதே நேரம் ஆர்பிஐ LoUs மற்றும் LoCs எனப்படும் இந்தக் கடன் மற்றும் வங்கி உத்தரவாத முறைகளானது வணிகர்களுக்குக் கடுமையான விதிகளுடன் விரைவில் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications