2018-2019 நிதி ஆண்டிற்கான தமிழ் நாடு நிதி நிலை அறிக்கையினை வாசித்து வரும் நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதன்மை சுகாதார மையங்கள் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சானிட்டரி நாப்கின் திட்டத்திற்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பள்ளி
10-ம் வகுப்பு வரை உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறைக்கு ரூ.4,620 கோடி நிதி ஒதுக்கீடு. பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இலவச கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகள் சுயவேலை வாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.25,000 ஆக உயர்வு.
சிறுபான்மையினர்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் ரூ.35 கோடி வழங்கப்படும்.
சென்னை
சென்னையில் வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டம் கீழ் 2055.67 கோடி ஒதுக்கீடு ஏறிப் போன்றவற்றைத் தூர் வாரப்பட்டு நீர் நிலைகளைச் சீர் செய்து மலை நீர் சேமிப்பிற்கு உறுதி அளிக்கப்படும்.
பசுமைப் பூங்கா
கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா தொடங்கப்படும்.