ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க மீண்டு காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்காது என்று நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதற்கு முன்பு பேக் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளின் மீதும் உள்ள விலைகளை ஸ்டிக்கர் ஒட்டி மாற்றி விற்க மத்திய அரசு முதலில் 2017 அக்டோபர் 31-ம் தேதி வரை அனுமதி அளித்தது.
வணிகர்கள்
வணிகர்கள் அதிகளவில் ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்கள் விற்றுத் தீரவில்லை என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொருட்களை விற்கக் காலக்கெடு நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டதன் பேரில் மத்திய அரசு 2017 டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் பின்னர் மீண்டும் 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பினை அளித்துள்ளனர்.
காலக்கெடு நீட்டிப்பு இல்லை
தற்போது இன்னும் 14 நாட்களில் 2018 மார்ச் 31 காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டு நீட்டிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலை ஸ்டிக்கர்
நவம்பர் மாதம் 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் மிதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றிய அரசு மாற்றி அமைத்த போது கூடுதல் ஸ்டிக்கர் ஒட்டி புதிய விலை பட்டியலை மாற்றவும் நுகர்வோர் விவகார துறை அனுமதி அளித்து இருந்தது.